ஹைத்ராபாத்: மக்கள் மற்றும் அரசுக்கு இடையில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அந்திர பிரதேச மாநிலம் இரண்டாக உடைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டத்து. இப்பிரிவினையின் போதும் தெலுங்கானா மாநிலத்தில் 10 மாவட்டங்களும் ஆந்திர பிரதேசத்தில் 13 மாவட்டங்களும் இருந்தன.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலத்திற்கு இணையாக வருவாய் மற்றும் வர்த்தக்தை அதிகரிக்கும் நோக்கில் 10 மாவட்டங்களை 31 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் புதிய 21 மாவட்டங்கள் மாவட்டங்கள தெலுங்கானாவின் உருவாகியுள்ளது.
மாநிலங்களின் வருவாய்
2015-2016 நிதி ஆண்டில் ஆந்திர பிரதேசம் 90,122.58 கோடி வருவாய் பெற்றுள்ள நிலையில், தெலுங்கானாவோ 88,550 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாகப் பெற்று உள்ளது.
31 மாவட்டங்களுக்கான காரணம்
கடந்த ஆறு மாதங்களாக இதற்கான பணியில் ஈடுபட்டு வந்த தெலுங்கானா அரசு நிர்வாகங்கள் முதலில் 17 மாவட்டங்களைத் தயார் செய்தது. ஆனால் மாநில அரசு மேலும் 4 மாவட்டங்களைச் சேர்க்குமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து கட்வால், ஜனகாவ், சிரசில்லா மற்றும் அசிஃபாபாத் போன்ற புதிய மாவட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
தெலுங்கானா அரசு அறிவிப்பு
இதற்காகத் திங்கட்கிழமை இரவு தெலுங்கானா அரசு முறையான அறிவிப்பை வெளியிட்டது அதில் புதிய மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மற்றும் பிற அரசு ஊழியர்கள் போன்றவற்றையும் அறிவித்தனர்.
வளர்ச்சி பணிகள்
புதிய மாவட்டங்கள் உருவாக்குவதன் மூலம் வளர்ச்சி பணிகளில் அரசு நிர்வாகங்கள் செயல்பட மிகவும் எளிமையாக இருக்கும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் கேசிஆர் கூறினார்.
இதுமட்டும் அல்லாமல் பல இடங்களில் வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகவும் இது வழிவகை செய்யும்.
தெலுங்கானா அரசு அலுவலகங்கள்
இந்த புதிய மாவட்டங்கள் முழுவதுமாக உருவாகும் போது 25 புதிய வருவாய் பிரிவுகள், 125 புதிய புதிய மண்டலங்கள், 4 புதிய காவல் துறை ஆணையங்கள், 23 புதிய துணை காவல் நிலையங்கள், 28 புதிய காவல் துறை வட்டங்கள் மற்றும் 91 புதிய காவல் துறை நிலையங்கள் உருவாக வாய்ப்பு உள்ளன.
சபாஷ் சரியான போட்டி..
அடுத்த சில வருடங்களில் வர்த்தகம் மற்றும் வருவாய் ரீதியாக பல போட்டிகள் இரு மாநிலங்கள் மத்தியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மத்தியில் இருந்து நகரபுற வளர்ச்சி, வீட்டு மனை வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பக்க பலமாக இருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications