மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-க்கு உச்ச நீதி மன்றத்திடம் இருந்து லோத்தா குழு அளித்த பரிந்துரைகள் படி நடத்த வேண்டும் என்பதில் அழுத்தம் தெரிவித்துள்ள நிலையில் இப்போட்டியில் அதிகம் வருவாய் அளிக்கும் ஊடக உரிமைகளுக்கும் ஒரு பக்கம் போட்டி நிலவி வருகிறது.
ஐபிஎல் போட்டியை இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு 2018-2027 வரை ஒலிபரப்பு செய்வதற்கான ஒப்பந்த கோரலுக்கு பெரும் போட்டி நிலவி வருகிறது.
போட்டி
இந்தப் போட்டியில் ஸ்டார் இந்தியா நிறுவனமும், தற்போது ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ள சோனி பிச்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவிற்கு இடையிலும் பெறும் போட்டி நிலவி வருகிறது.
விண்ணப்பங்கள்
ஐபிஎல் போட்டியை ஒலிபரப்புவதற்காக இது வரை 16 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், ஸ்டார் அல்லது சோனி இரு நிறுவனங்களில் யாரேனும் ஒருவருக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் ஒளிபரப்பும் உரிமை இரண்டு நிறுவனங்களும் பெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டிஜிட்டல் ஒலிபரப்பு முறையில் இன்னும் பெறும் போட்டி நிலவி வருகிறது.
டிஜிட்டல் முறை
அமேசான் இந்தியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டைம்ஸ் இண்டெர்னெட் போன்றவர்கள் டிஜிட்டல் ஒளிபரப்பு முறையில் பெறும் போட்டியாளர்களாக உள்ளனர்.
வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமை
ஈஎஸ்பிஎன் நிறுவனம் அமெரிக்க ஒளிபரப்பு உரிமைக்கும், ஸ்கை மற்றும் பிடி குழுமம் ஐரோப்பாவில் ஒளிபரப்புவதற்கான உரிமைக்கு ஏலத்தில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அல் ஜஷீரா மீடியா நெட்வொர்க்கின் பீன் மீடியா நிறுவனம் இப்போது ஒளிபரப்பு உரிமை வைத்துள்ள ஓஎஸ்என் நிறுவனத்துடன் போட்டியில் குதித்துள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் எக்கோனெட் வயர்லெஸ் மற்றும் சூப்பர் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.
நிபுணர்கள் கருத்து
தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளுக்கான போட்டியை பற்றிக் கூறியுள்ள நிபுணர்கள் இந்த முறை இந்திய ஒளிபரப்பு உரிமை மட்டும் 20,000 கோடி ரூபாய் முதல் 27,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறுகின்றனர். இது 30,000 கோடி வரை கூட போகலாம் என்றும் போட்டி அதிகரிக்கும் போது இன்னும் அதிகமாகவும் போகலாம் என்று கூறுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications