டெல்லி: இந்திய ஐடி நிறுவனங்கள் அன்மைக் காலமாக வளர்ச்சியில் தடுமாறிக்கொண்டும் போராடிக் கொண்டும் வருகின்றன. ஜூன் மாத காலாண்டு முடிவின் படி இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலைமை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
டிசிஎஸ் காலாண்டு அறிக்கை
செப்டம்பர் காலாண்டு அறிக்கையை வெளியிட்ட டிசிஎஸ் நிலையான நாணய கொள்கை அடிப்படையில் 2.5 சதவீதத்தைவிடக் குறைவான 1 சதவீத வளர்ச்சியை மட்டுமே பெற்று உள்ளது.
நிலையான நாணய கொள்கையில் வளர்ச்சி விகிதம் ஜூன் மாதக் கணக்கின் படி வருடத்திற்கு 10.1 சதவீதம் இருக்க வேண்டும் ஆனால் அது குறைந்து 7 சதவீதமாக உள்ளது.
வாடிக்கையாளர்களின் முடிவு
ஒரு மாதத்திற்கு முன்பு தங்களது நிறுவனத்திடம் இருந்து மென்பொருள் சேவை பெற்று வருபவர்களில் குறிப்பாக வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு சேவை வழங்குநர்கள் தாற்காலிகமாக முதலீடுகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்த உடன் நிறுவனத்தின் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது என்று அறிவித்தது.
அவ்வாறு அறிவித்த போதிலும் கடந்த காலாண்டில் 1 சதவீதம் வளர்ச்சியே பெற இயலும் என்று கணித்த போது 1.2 சதவீதம் வளர்ச்சியை எட்டியது.
முதலீட்டாளர்கள் ஏமாற்றம்
சில்லைரை வணிகத்தில் வருவாய் மொத்தமாக குறைந்து உள்ளதாக கூறியுள்ள டிசிஎஸ் இதனால் இந்தியாவிலும் வர்த்தகம் மந்தமான நிலையிலேயே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
பிற பிரிவுகளில் 3 முதல் 4 சதவீதம் வரை வளர்ச்சி இருந்த போதிலும் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஜீரோ பிரீமியம்
டிசிஎஸ் நிறுவனப் பங்குகளின் விலை வெள்ளிக்கிழமை மிகவும் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் சென்ற மாத்துடன் ஒப்பிடும் போது மிக மோசமான நிலையில் உள்ளது.
புதன் கிழமை வரை 19 சதவீதம் பீரிமியம் விலையில் வர்த்தகம் ஆகி வந்த வந்த டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை ஆன இன்று 4 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இப்படியே சென்றால் பிரீமியம் விலையே இல்லாமல் போகும் நிலைமையில் உள்ளது. இன்ஃபோஸிஸ் நிறுவன முடிவுகளும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
நிறுவனத்தின் மார்ஜின்
வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் போது நிறுவனத்தின் மார்ஜின் குறைவாகவே இருக்கும். எப்போது நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதில் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதற்காகத் துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்களுடன் பிராஜக்ட்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது என்று கூறப்படுகிறது.
சவால்கள் அதிகம்
கடந்த சில காலாண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்து வருவதைப் பார்க்கும் போது ஐடி துறை இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இந்திய நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அக்சன்சர், கேப்ஜெமினி நிறுவனங்களின் இந்தியா மற்றும் உலகளவில் தங்களது சந்தையை அதிகரித்துள்ளதும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications