கடந்த இரண்டு வருடங்களாக 15 பங்குகள் 24 சதவீதம் லாபத்தை அளித்துள்ளன. இது வங்கியில் உள்ள நிரந்தர வைப்பு நிதி கணக்குகளை விட அதிகம்.
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து கடந்த இரண்டு வருடங்களாக 15 பங்குகள் 24 சதவீதம் லாபத்தை அளித்துள்ளன. இது வங்கியில் உள்ள நிரந்தர வைப்பு நிதி கணக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
மே 2014 முதல்
நிப்டி க்ரோத் 15 மற்றும் என்எஸ்ஈ டிராக்கிங் 15 தரவுகளின் படி மே 2014 முதல் 24.4 சதவீதம் வரை சில துறை சார்ந்த பங்குகள் மட்டும் லாபம் அளித்துள்ளன.
இதே மே மாதம் தான் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவிக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபத்தை அளித்துள்ளன.
அது மட்டும் இல்லாமல் சில நுகர்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஆடோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் அடுத்த நிலையில் உள்ளன.
ஈச்சர் மோடார்ஸ்
ஈச்சர் மோடார்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 2014,மே 22 ஆம் தேதி 7,305 ரூபாயாக இருந்தது இதுவே இப்போது 25,800 ரூபாயாக 253 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது.
153 முதல் 53 சதவீதம் வரை உயர்ந்த பங்குகள்
மாருதி சூஸிகி நிறுவன பங்குகள் 153 சதவீதமும், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் 126 சதவீதமும், லூபின் நிறுவனப் பங்குகள் 60 சதவீதமும், எச்யூஎல் நிறுவனப் பங்குகள் 53 சதவீதமும் இதே காலகட்டத்தில் உயர்ந்துள்ளன.
ஐடி நிறுவனங்கள்
2014 மே மாதத்துடன் ஒப்பிடும் போது விப்ரோ நிறுவனம் அப்போது இருந்ததை விட 1 சதவீதம் விலை குறைந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை இந்த 31 மாதத்தில் மட்டும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் இன்ஃபோஸிஸ் நிறுவனங்கள் முறையே 22 மற்றும் 35 சதவீதம் உயர்ந்துள்ளன.
நுகர்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications