இந்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2013-14 கணக்கெடுப்பு ஆண்டில், இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3.6 கோடியாக இருந்தது. இதே 2014-15ஆம் ஆண்டு 8 சதவீதம் உயர்ந்து 3.9 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஒரு ஆண்டு இடைவேளையில் இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் அல்லது வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல் வருமான வரியாக வசூல் செய்யப்படும் தொகை 3,93,918 கோடி ரூபாயில் இருந்து 13 சதவீதம் உயர்ந்து 4,46,719 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
3,50,000 ரூபாய்க்குக் குறைவாக வருமான உடையோர் எண்ணிக்கை 2013-14ஆம் ஆண்டில் 64 சதவீதமாக இருந்த நிலையில் 2014-15ஆம் கணக்கெடுப்பு ஆண்டில் 61 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2013-14ஆம் கணக்கெடுப்பு ஆண்டில் 500 கோடி ரூபாயாக்கும் அதிகமான வருமானம் உடையோர் எண்ணிக்கை 206ஆக இருந்த நிலையில் 2014-15ஆம் ஆண்டு 182 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.