நாட்டின் முன்னணி கணிம வள நிறுவனமான வேதாந்தா, 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 1,252 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது.
இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 17 சதவீதம் அதிகமாகும். 2015ஆம் நிதியாண்டின் ஜூலை- செப்டம்பர் காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் 1,069 கோடி ரூபாயாக இருந்தது.
வேதாந்தா நிறுவனத்தின் லாப அளவுகள் உயர்ந்தாலும் வருவாய் அளவு சுமார் 4 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 16,340 கோடி ரூபாயாக இருந்த வருவாய் அளவு 2016ஆம் ஆண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான காலத்தில் 15,666 கோடி ரூபாயாக குறந்துள்ளது.
இந்த தரவுகள் அனைத்தும் வரிக்கு, வட்டிக்கு பின்னான தொகையாகும்.
மேலும் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 1.75 ரூபாய் ஈவுத்தொகை அளிக்கவும் இந்நிறுவனத்தின் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.