வங்கி மற்றும் ஏடிஎம் பண பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாட்டு.. ஆர்பிஐ அறிவிப்பு..!

நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. ஏடிஎம் இயந்திரமும் இயங்காது. பண பிரமாற்றங்கள் அதிகளவில் முடக்கம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என நவம்பர் 8ஆம் தேதி இரவு அறிவித்த உள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் அதிர்ந்துபோய் உள்ளனர்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி மக்களின் அன்றாட பண புழக்கத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

வங்கிகள் விடுமுறை

வங்கிகள் விடுமுறை

புதன்கிழமை (நவம்பர் 9ஆம் தேதி) இந்தியாவில் தனியார், பொதுத்துறை, கூட்டுறவு, கிராம மற்றும் ஊரக வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 ஏடிஎம் இயந்திரங்கள்

ஏடிஎம் இயந்திரங்கள்

அதேபோல் ஏடிஎம் இயந்திரம், பணம் டெப்பாசிட் செய்யும் இயந்திரம் என அனைத்தும் இன்று செயல்படாது. ஆனால் இணையம் மற்றும் மொபைல் வங்கியியல் இயங்கும்.

வங்கிகளின் உள் வேலைகள்

வங்கிகளின் உள் வேலைகள்

வங்கிகள் இன்று ஒரு நாளுக்குள் தனது கஜானா மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வேலைகளைச் செய்ய உள்ளது.

2,000 ரூபாய் மட்டுமே..

2,000 ரூபாய் மட்டுமே..

அதன்பின் நவம்பர் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஏடிஎம் இயந்திரங்களில் வெறும் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் நவம்பர் 19ஆம் தேதி முதல் இந்த அளவுகோல் 4000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 

வங்கியில் பணம் எடுத்தல்..

வங்கியில் பணம் எடுத்தல்..

மேலும் வங்கி வைப்புக் கணக்கில் இருந்து வித்டிரா அளவு நவம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு நாளுக்கு 10,000 ரூபாயாகவும், ஒரு வாரத்திற்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே அனுமதி அளிக்கிறது.

ஆர்பிஐ

ஆர்பிஐ


நவம்பர் 10ஆம் தேதி முதல், கார்பரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனகள், அறக்கட்டளைகள், என அனைத்துத் தரப்பினரும், தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு ரிசர்வ் வங்கி கிளையிலும் மொத்தமாக மாற்றிக்கொள்ளலாம்.

மாற்றப்படும் தொகை அவர்களது வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகள்

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகள்

மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம் மட்டும் அல்லாமல் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை முழுமையாகக் குறைக்க முடியும்.

ரத்தகளறி

ரத்தகளறி

<strong>மத்திய அரசின் முடிவால் 'ரத்தகளறி' ஆனது மும்பை பங்குச்சந்தை..!</strong>மத்திய அரசின் முடிவால் 'ரத்தகளறி' ஆனது மும்பை பங்குச்சந்தை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks closed on Nov9; ATM will not function

Banks closed on Nov9; ATM will not function - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X