மும்பை: இந்திய மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் நாள் முழுவதும் காத்துக்கிடக்கும் இந்த வேளையில் திங்கட்கிழமை வங்கிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி குருபூராப் (குருநானக் ஜெயந்தி) பண்டிகைக்காக இந்தியாவில் 15 நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கியின் வருடாந்திர காலாண்டிரில் குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் 12,13ஆம் தேதிகளில் மக்களுக்குப் பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வங்கிகள் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது ஆர்பிஐ. அதிலும் இரவு 9 மணி வரை வங்கிகள் செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால் திங்கட்கிழமை அளிக்கப்பட்டுள்ள விடுமுறை ரத்து குறித்து இதுவரை யாரும் கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அறிவிப்புகள் வங்கிகள் வெளியிடவில்லை.
ஏற்கனவே மக்கள் வங்கி மற்றும் ஏடிஎம்களில் போதிய பணம் எடுக்க முடியாத காரணத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளனர்.
இந்நிலையில் ஆர்பிஐ விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 15 நகரங்களின் பட்டியல் இதோ
1. பெலப்பூர்
2. போபால்
3. சண்டிகர்
4. டேராடூன்
5. கவுகாத்தி
6. ஹைதெராபாத்
7. ஜெய்ப்பூர்
8. கான்பூர்
9. கொல்கத்தா
10. லக்னோ
11. மும்பை
12. நாக்பூர்
13. டெல்லி
14. ராய்ப்பூர்
15. ராஞ்சி
மேலும் படிக்க: