நாட்டின் மிகப்பெரிய மதுபான தயாரிப்பு நிறுவனமான யுபி குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனுக்காக அவருக்குச் சொந்தமான 1700 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளைத் தடாலடியாக அமலாக்க இயக்குநரகம் கைப்பற்றியுள்ளது.
பணச் சலவை
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய 9000 கோடி ரூபாய் கடனை திருப்பச் செலுத்தாமல் லண்டனுக்குச் சென்று ஒளிந்திருக்கும் விஜய் மல்லையான நிறுவனத்தில் செய்த பணச் சலவை குற்றத்திற்காக அமலாக்கத் துறை, யுபி குருப் நிறுவனங்களில் மல்லையாவிற்குச் சொந்தமாக இருக்கும் 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
பங்குகள்
வெள்ளிக்கிழமை மாலை அமலாக்க துறை வெளியிட்ட அறிவிப்பில் யுனைடெட் பிரிவரீஸ் நிறுவனத்தில் 850 கோடி ரூபாய், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் 400 கோடி ரூபாய், யுனைடெட் பிரிவரீஸ் ஹோல்டிங் நிறுவனத்தில் இருக்கும் 24 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் கைப்பற்றுதல் அனைத்தும் மல்லையா தனது நிறுவனத்தில் பணச் சலவை செய்துள்ளது நிருபனம் செய்யப்பட்டு, பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் மல்லையாவிற்குச் சொந்தமான பங்குகளைக் கைப்பற்றியுள்ளது அமலாக்கத் துறை.
10,000 கோடி ரூபாய் சொத்துக்கள்
இதுவரை அமலாக்கத்துறை மல்லையா அவர்களின் சொத்துக்களாக 6,630 கோடி ரூபாய், மல்லையா மற்றும் கூட்டாளிகளுக்குச் சொந்தமான 1,441 கோடி ரூபாய் சொத்துகளைக் கைப்பற்றியுள்ளது.
தற்போது கைப்பற்றியுள்ள பங்குகளையும் சேர்த்து சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது அமலாக்கத்துறை.
ஆதிக்கம்
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் மல்லையாவிற்குச் சொந்தமாக 3.72 சதவீத பங்குகள் உள்ளது. இதன் மதிப்பு 1,250 கோடி ரூபாய். இதில் பாதியும், யுனைடெட் பிரிவரீஸ் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகள் மல்லையாவிற்குச் சொந்தமாக உள்ளது.