இந்திய மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் நாள் முழுவதும் காத்துக்கிடக்கும் நிலையில் திங்கட்கிழமை குருநானக் ஜெயந்தி பண்டிகைக்காக வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
நவம்பர் 14ஆம் தேதி குருபூராப் (குருநானக் ஜெயந்தி) பண்டிகைக்காக இந்தியாவில் 15 நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கியின் வருடாந்திர காலாண்டிரில் குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் 12,13ஆம் தேதிகளில் மக்களுக்குப் பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வங்கிகள் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ள நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கட்கிழமை பெரும்பாலான வங்கிகள் இயங்கும் என அறிவித்துள்ளார்.
இதனால் மக்கள் அனைவரும் திங்கட்கிழமையும் தங்களது பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.