500,1000 ரூபாய் தடைக்கு பின் மத்திய அரசின் மிகமுக்கிய முடிவு.
டெல்லி: இந்திய மக்கள் மத்தியில் புகையிலை பயன்பாட்டைக் குறைக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்து வரும் மத்திய அரசு தற்போது மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான புகையிலை தயாரிக்கும் நிறுவனங்கள் அன்னிய முதலீட்டு வாயிலாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இனியும் இத்துறை அன்னிய முதலீட்டால் வளர்ச்சி அடையக் கூடாது என்று மத்திய அரசு புகையிலை தயாரிப்புத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு முழுமையான தடையை அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம்
இந்திய புகையிலை தயாரிப்பில் துறையில் டிரேட்மார்க் அல்லது உரிமையின் வாயிலாகச் செய்யப்படும் அன்னிய முதலீட்டை முழுமையாகத் தடை செய்வதற்கான இறுதி அறிக்கையைத் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் வைத்துள்ளது.
முழுமையான அறிவிப்பு
இந்தியாவில் புகையிலை தயாரிப்புக்கு அன்னிய முதலீடு ஏற்கனவே தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரான்சைஸ், டிரேட்மார்க், பிராண்ட் பெயர், நிர்வாக ஒப்பந்தம், மற்றும் தொழில்நுட்ப இணைப்பு என அனைத்து வகையிலும் அன்னிய முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது என மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முக்கிய நிறுவனங்கள்
சுகாதாரம் மற்றும் நிதியமைச்சகம் இணைந்து ஆலோசனை செய்யதப்பின் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் அதற்கான முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒப்புதலாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மசோதா ஒப்புதல் பெற்றால் அன்னிய முதலீட்டின் தடை காட்பேரே பிலிப்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும்.
ஒட்டைகள்
புகையிலை தயாரிப்பில் அன்னிய முதலீட்டை முழுமையாகத் தடுக்கச் சந்தையில் இருக்கும் அனைத்து ஓட்டைகளையும் அடைக்கத் திட்டமிட்டுள்ளோம் என அரசு அதிகாரி தெரிவித்தார்.
புகையிலை பயன்பாட்டுக்குத் தடை..
இந்தியாவில் புகையிலை பயன்பாட்டைக் குறைக்கச் சிகரெட், பீடி, பான் மசாலா போன்ற அனைத்துப் புகையிலை பொருட்களின் மீதும் அரசு அதிகளவிலான வரியை விதித்தாலும், பயன்பாட்டு அளவு அதிகளவில் குறைக்க முடியவில்லை. இதனால் அரசு தனது கட்டுப்பாடுகளைப் புகையிலை தயாரிக்கும் நிறுவனங்கள் பக்கும் திருப்பியுள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் காட்பிரே பிலிப்ஸ் பங்குகள் 0.33 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேபோல் ஐடிசி, என்டிசி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் பாதிப்படைந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications