மத்தளத்திற்கு இருபக்கம் தான் அடி என்றால், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு 360 கோணத்திலும் அடி..!
சென்னை: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அமேசான் நிறுவனத்துடனான போட்டியில் 2016ஆம் நிதியாண்டு காலத்தில் 2,300 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துத் துவண்டுபோன நிலையில், சர்வதேச மியூச்சவல் பண்ட் மேலாண்மை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் அறிவிப்பால் ஒட்டுமொத்த இந்திய ஈகாமர்ஸ் சந்தையே ஆட்டம் கண்டுள்ளது.
ஜூலை 2015ஆம் ஆண்டுப் பிளிப்கார்ட் நிறுவனம், தனது நிறுவனம் மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டபோது, சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு 15.2 பில்லியன் டாலர். ஆனால் கடந்த ஒரு வருடத்தில், இந்திய சந்தையில் அமேசான் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 4 முறை குறைக்கப்பட்டுத் தற்போது வெறும் 5.5 பில்லியன் டாலர் தான் இந்நிறுவனத்தின் மதிப்பாக மோர்கன் ஸ்டான்லி அறிவித்துள்ளது. இந்திய டெக்னாலஜி நிறுவனங்களின் ஆதிக்கம் இந்திய சந்தையில் அதிகரித்து வந்த நிலையில் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இத்தகைய நிறுவனங்களில் முதலீட்டை வாரி வழங்கியது. ஆனால் மேக்ரோ பொருளாதாரப் பிரச்சனை வெடித்த பின் இதன் நிலை முழுமையாக மாறி தற்போது போட்ட முதலீட்டை எடுத்தால் போதுமென நிற்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் மோர்கன் ஸ்டான்லி பல வழிகளில் சுமார் 1.5 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது. 1.5 சதவீதம் என்றால் தற்போதைய நிலையில் 1,969 பங்குகள். இந்திய சந்தையில் பிளிப்கார்ட் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் குறைந்து நஷ்டத்தின் அளவு சுமார் 110 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பை 38 சதவீதம் குறைத்து ஒரு பங்கின் விலை 52.13 டாலராக அறிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு மோர்கன் ஸ்டான்லி, பிளிபகார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது இதன் மதிப்பு 87.9 டாலர், மார்ச் 2016இல் 84.29 டாலர். தற்போது இதன் மதிப்பை 38 சதவீதம் குறைத்து 52.13 டாலராக அறிவித்துள்ளது.
மதிப்பீடு குறைப்பு
முதலீடும்.. சந்தையும்..
மோர்கன் ஸ்டான்லி
38 சதவீதம் சரிவு..
பங்கு விலை மாற்றங்கள்
அமேசான் உடன் போட்டி..
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications