வருகின்ற 2017 ஏப்ரல் முதல் இணையதளம் மற்றும் நேரடி கவுண்டர்களில் ரயில் டிக்கெட்கள் பெறும் போது மூத்த குடிமக்களுக்கான சலுகையைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெரிவு மார்ச் 2017 வரை விருப்பத் தேர்வாக மட்டும் இருக்கும். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
இதன் மூலம் மூத்த குடிமக்கள் பெயரில் முன்பதிவு டிக்கெட் எடுக்கும் போது ஏற்படும் மோசடிகளைத் தவிர்க்கலாம் என்பதே ஆதார் அட்டை இணைப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் போது மூத்த குடிமக்கள் பிரிவைத் தேர்வு செய்தால் 2017 ஏப்ரல் முதல் கட்டாயமாக ஆதார் அட்டை தேவை. அதே போன்று நேரடி கவுண்டர்களில் ஆதார் அட்டையைக் காண்பித்து டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம்.