டோல் கட்டணங்களை டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலுத்தலாம்..!

500 ரூபாய் நோட்டுகளைக் கட்டணங்களாக பெறுவது மட்டும் இல்லாமல் டெபிட், கிரெடிட் மற்றும் இ-வாலெட்டுகள் வாயிலாகவும் கட்டணம் செலுத்தலாம்.

நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து டோல்களிலும் டிசம்பர் 15 வரை 500 ரூபாய் நோட்டுகளைக் கட்டணங்களாக பெறுவது மட்டும் இல்லாமல் டெபிட், கிரெடிட் மற்றும் இ-வாலெட்டுகள் வாயிலாகவும் கட்டணம் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை

டோல் கேட்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏதும் நடக்காமல் இருக்க உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் காவல் துறையினரை நியமித்துத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தி உள்ளது.

பண சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை

பண சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை

இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகம் நெடுஞ்சாலைகளில் தற்போது உள்ள சிக்கல்களை தீர்க்கப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பிரிவாக டெபிட், கிரெடிட் மற்றும் இ-வாலெட்டுகள் பயன்படுத்தி கட்டணம் செலுத்த வங்கிகள் மூலம் சாதனங்களை நிறுவுகின்றது.

பழைய 500 ரூபாய்

பழைய 500 ரூபாய்

ஒரு பக்கம் இந்தச் சாதனங்கள் நிறுவும் பணிகள் நடந்து வரும் நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டுகள் டோல் கட்டணங்களாக பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2 ஆம் தேதி முதல்

டிசம்பர் 2 ஆம் தேதி முதல்

பழைய ரூபாய் நோட்டுகள் சென்ற நவம்பர் 8 ஆம் தேதி முதல் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து இலவசமாக டோல்களில் கடந்த செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது, பின்னர் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+