நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் இந்தியாவில் 85 சதவீதம் நாணய புழக்கித்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்.
இதன் பின் மத்திய அரசும் மற்றும் ரிசர்வ் வங்கியும் இணைந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டு குறித்து புதிய ஒரு செய்தி கிடைத்துள்ளது.
எஸ் குருமூர்த்தி
2000 ரூபாய் நொட்டுகளைப் பதுக்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல். தற்போதைய சூழ்நிலைக்காக 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, விரைவில் இதனை மத்திய அரசு திரும்பப்பெறும் என்று ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் எஸ் குருமூர்த்திக் குறியுள்ளார்.
5 வருடம்
திங்கட்கிழமை இன்று இந்தியா டூடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த இவர் இன்னும் 5 வருடத்தில் 2000 ரூபாய் நோட்டுத் திரும்பப் பெறப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த கெஜிர்வால்
2000 ரூபாய் நோட்டு ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை எப்படி அளிக்கும் என்று அரவிந்த கெஜிர்வால் போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதே கேள்வி மற்றும் அரசின் முடிவு பற்றிக் குருமூர்த்தி எதிர் கொண்டார்.
மீண்டும் 1000 ரூபாய்
இதைப் பற்றிய தனது கருத்தை தெரிவித்த குருமூர்த்தி 2000 ரூபாய் நோட்டு ஒரு பாலம் தான் என்றும், அரசு மீண்டும் 1000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தும் அப்போது இந்த 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். இதற்கு 4 முதல் 5 ஆண்டு வரை காலம் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை
2000 ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறவிக்கும் போது இந்திய ரூபாய்களின் மீதான மக்களின் நம்பிக்கை சென்று விடாதா என்று கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த குருமூர்த்தி இது படிப்படியாக மாற்றப்படுமோ தவிர இப்போது 500 மற்றும் 1000 ரூபாய்களைச் செல்லாது என்று அறிவித்ததைப் போன்று இருக்காது என்றும் கூறியுள்ளார்.
'கரு..." data-gal-src="http:///img/600x100/2016/12/13-1481610158-3-currency-blackmoney.jpg">