இந்திய மக்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டை கதிர்வீச்சு மையால் அச்சடிக்கப்பட்டுள்ளது. பதுக்கி வைத்தால் ஜெயில் நிச்சயம்.!
இந்தியாவில் 2000 ரூபாய் புழக்கத்திற்கு வந்த நாள் முதல் இதுகுறித்துத் தினமும் ஒரு புரளி வருகிறது, இதில் நேநோ ஜிபிஎஸ் புரளி அதிரிபுதிரியானது.
இந்தப் புரளியின் இம்சை தாங்க முடியாமல், மத்திய அரசே நேநோ ஜிபிஎஸ் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் புரளியே, மக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் எனவும், புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் போன்ற எதுவுமில்லை எனவும் தெளிவுபடுத்தியது.
நேநோ ஜிபிஎஸ் புரளியை தூக்கிச் சாப்பிடும் அளவிற்குத் தற்போது புதிய செய்தி வந்துள்ளது. இதுதான் 'Radioactive Ink'.
2000 ரூபாய் நோட்டுகள்
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின் நாட்டில் உள்ள கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் மீதான புழக்கத்தைத் தடை செய்தது.
இதற்கு மாறாகப் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
இதில் தான் பிரச்சனை..
புதிதாக அச்சிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் P32 என்ற கதிரியக்க ஐசோடோப்புக் கொண்ட மையால் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த மையில் 15 புரோட்டான் மற்றும் 17 நியூட்டரான் கொண்டு Radioactive பொருள் மூலம் மக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மிகவும் குறைவான அளவுகளான Radioactive பொருள் கொண்டு இவை அச்சிடப்பட்டுள்ளது என்ற புரளி சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நிறம்
மேலும் 2000 ரூபாய் நோட்கள் வெளியிட்ட சில நாட்களில் இதில் இருக்கும் நிறம் தண்ணீர் மற்றும் துணியைக் கொண்டு தேய்க்கும் போது சாயம் போவது மக்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டு வந்தது.
ஆனால் புதிய மற்றும் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய், 100 ரூபாய் நோட்களில் இதுவரை சாயம்போனதில்லை. தற்போது 2000 ரூபாய் நோட்டில் சாயம் போவதற்கும் இந்த 'Radioactive Ink' தான் காரணம் என்றும் புரளி பரவி வருகிறது.
பதுக்கல்
இந்த 'Radioactive Ink' வாயிலாக வெளிப்படும் கதிர் வீச்சுகள் மூலமாகவே தற்போது வருமான வரித் துறையினர் நடத்தும் சோதனையில் கட்டுக்கட்டாகப் பதுக்கப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது.
மகிழ்ச்சி
'Radioactive Ink' உண்மை என்றால் பணம் பதுக்கும் ஆசாமிகளுக்கு அது சோகமான செய்தி என்றாலும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி.
உறுதி..
இதுவரை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 'Radioactive Ink' குறித்த செய்திகளுக்கும் வதந்திகளும் பொய் என எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை.
எஸ் குருமூர்த்தி
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications