பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள் உலகின் மிகக் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றாகிய துபாயில் வீடுகள் மற்றும் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள் உலகின் மிகக் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றாகிய துபாயில் வீடுகள் மற்றும் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பாலிவுட்டில் மட்டுமல்ல கோலிவுடிலும் பல இப்பட்டியலில் அடங்குவர். உலக அழகியின் இந்த அழகிய வீட்டை கொஞ்சம் பாருங்க.
கிங் ஆஃ பாலிவுட்
ஷாருக்கானை அடுத்துத் தற்போது ஐஸ்வர்யாராய் -அபிஷேக் பச்சன் துபாயில் மிகப்பெரிய மதிப்பில் புதிய வில்லா ஒன்றை துபாயின் ஜுமேராஹ் கோல்ப் எஸ்டேட்டில் உள்ள சாங்க்டுயுவரி ஃபால்ஸ் அருகே வாங்கியுள்ளனர். இந்த வில்லாவில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் விடுமுறை காலங்களில் தங்கி வருகின்றனர்.
பாலிவுட் நட்சத்திரங்கள்
பாலிவுட் பிரபலங்கள் துபாயில் வில்லாக்களை வாங்கிக் குவிப்பது மட்டுமின்றித் துபாயில் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வருகின்றனர். சல்மான்கான், சோஹாலிகான், அக்சயகுமார், கேத்ரினா கைப் மற்றும் பலர் துபாயில் பல வீடுகள் மற்றும் நிலங்களை வாங்கியுள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் - அபிசேக் பச்சன்
இனி ஐஸ்வர்யா ராய் - அபிசேக் பச்சன் வாங்கிய துபாய் வில்லா குறித்துத் தற்போது பார்ப்போம்:
ஐஸ்வர்யா ராய் - அபிசேக் பச்சன் வில்லாவில் உள்ள அறைகளில் குறைந்த அளவில் மதிப்புமிக்கப் பர்னிச்சர்கள் மற்றும் லெதர் சோபா ஆகியவை உள்ளது.
கிச்சனை பொருத்தவரை ஸ்காவோலினி டிசைனில் அட்வான்ஸ் சிஸ்டம் கொண்ட பொருட்கள் அடங்கியுள்ளதால் உலகத்தரமான கிச்சன் உள்ளது.
ஆடம்பரமான மாஸ்டர் பெட்ரூம்
டார்க் கலரின் இண்டீரியர் டெக்கரேஷன் மற்றும் உயர்தர மரத்தால் செய்யப்பட்ட தரைதளம், ஆகியவை ஆடம்பரமான மாஸ்டர் பெட்ரூமை அழகுபடுத்தி உள்ளது.
ஆச்சரியம் அளிக்கும் வியூ
இரவு நேரத்தில் இந்த வில்லாவில் இருந்து துபாயின் முழு அழகையும், வண்ண வண்ண விளக்குகளையும் ரசிக்கலாம். துபாயில் உள்ள மிகச்சிறந்த வில்லாக்களில் ஒன்று இது என்பது குறிப்பிடத்தக்கது.
கோல்ப் போட்டிகள்
இந்த வில்லா துபாய் கரன்சியில் 1.1 பில்லியன் மதிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டு 2010ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த வில்லாவின் அருகில் கோல்ப் மைதானங்கள் உள்ளது. இந்த மைதானங்களில் உலகப்புகழ் பெற்ற கோல் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
ரியல் எஸ்டேட்
எந்தத் துறையினராய் இருந்தாலும் ரியல் எஸ்டேட் மீது அனைவருக்கும் ஒரு கண் உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை பல காரணங்களுக்காக நலிவடைந்துள்ள நிலையில், துபாய் போன்ற நாடுகளில் பணம் படைத்தவர்கள் அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.
துபாய் ரியல் எஸ்டேட்
கச்சா எண்ணெய் விலை சரிவால் துபாய், ஈராக், சவுதி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகளவிலா வருவாய் சரிவை அடைந்துள்ளது. இதனால் இந்நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையிலும் மவுசு குறைந்துள்ளது. இதனை வாய்ப்பாகக் கொண்டு பலரும் வளைகுடா ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகின்றனர்.