இது யாருடைய கணக்கு..?
மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் புழகத்தில் இருந்து நீக்கியது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தித் தற்போது தணிந்துள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி போலி 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த கதை தெரியுமா உங்களுக்கு.? அட உண்மையாகத் தான்.
வெள்ளி நூல்
இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படுவது வெள்ளி நூல் தான்.
சாமானிய மக்கள் வரை அனைவரும் இதனைக் கொண்டு தான் கள்ள நோட்டிற்கும், அரசாங்க நோட்டிற்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கின்றனர். ஏனெனில் இது கண்களுக்கு எளிதாகப் புலப்படுபவை.
30,000 கோடி ரூபாய்
இத்தகைய சிறப்புடைய வெள்ளி நூல் இல்லாமல் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அச்சடித்து.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி தவறுதலாக 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துவிட்டது. இவை அனைத்தும் 5AG, 3AP வரிசையில் இருந்தது.
இது அதிகாரப்பூர்வமாகச் செல்லாது எனவும், இதனை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
புழக்கத்தில் 10,000 கோடி ரூபாய்
ரிசர்வ் வங்கி வெள்ளி நூல் இல்லாமல் அச்சடிக்கப்பட்ட 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளில் 20,000 கோடி ரூபாய் ஆர்பிஐ-யிடமும், 10,000 கோடி ரூபாய் புழக்கத்திற்கு வந்தது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் விரைவான நடவடிக்கையின் மூலம் பெருமளவிலான தொகை விரைவில் பிடிக்கப்பட்டது.
மத்திய பிரதேசம்
தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்-இல் உள்ள Security Printing and Minting கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்-இல் உள்ள ஆர்பிஐ அச்சகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
1000 ரூபாய் நோட்டுகள் எரிப்பு
தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளை அனைத்தும் தீயிட்டு எரிக்க ஆர்பிஐ மற்றும் நிதியமைச்சகம் முடிவு செய்து முழுமையாக எரித்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications