பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் டிசம்பர் 30 வரை முதலீடு செய்ய புதிய விதியை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இன்று முதல் 5000 ரூபாய்க்கும் அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் நீங்கள் டெப்பாசிட் செய்ய வேண்டும் என்றால் ஒரு முறை மட்டுமே செய்ய முடியும்.
எதற்கு புதிய விதி?
கணக்கில் வராமல் கருப்பப் பணமாக இருப்பதைக் கண்டறிய இந்த புதிய விதியை அமல்படுத்துவதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
5000 ரூபாய் விதிமுறை
இதனால் இனி டிசம்பர் 30 வரை 5000 ரூபாய்க்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ஒரு முறைக்கு மேல் முதலீடு செய்ய முடியாது, வேண்டும் என்றால் ஒரு முறை 5000 ரூபாய்க்கு அதிகமாகவும் அதன் பிறகு 5000 ரூபாய் அல்லது அதற்குக் குறைவான தொகையை வங்கிகளில் டெப்பாசிட் செய்யலாம்.
யாருக்கு விலக்கு உண்டு
இதுவே டிசம்பர் 17-ம் தேதி அறிவித்த பிரதான மந்திரி கரிப் கல்யாண யோஜனா திட்டத்தின் கீழ் கருப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வர இருப்பவர்களுக்கு இந்த விதி இல்லை.
ஆர்பிஐ
5000 ரூபாய் புதிய விதி பற்றி அறிக்கையை ஆர்பிஐ இன்று மாலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.