கருப்ப பணம் வைத்திருப்பவர்கள் தார்களாகவே முன் வந்து விவரங்களை அளித்தால் குறைந்த அபராதத்துடன் வெள்ளையாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அதற்கான தகவல்களை '[email protected]' என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
மூன்று நாட்களில் இவ்வளவு மின்னஞ்சல்..!
இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களில் 4000 மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த தகவல்களைப் பயன்படுத்தி கருப்புப் பணத்தை ஒலிக்க முடியும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
நல்ல பதில்
நவம்பர் 8-ம் தேதி வெளிவந்த செல்லா ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பிற்குப் பின்னர் பணத்தை மாற்றுவது, ஹவாலா பரிவர்த்தனை செய்வது போன்ற முறையற்ற பரிவத்தனையின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் பணி நீக்கம்
வருமான வரித் துறையினர் வங்கிகளில் நடக்கும் பரிவர்த்தனையை தொடர்ந்து கண்காணித்து அதன் மூலம் பெற்ற தகவல்களை வைத்து முறைகேடான பரிவர்த்தனைக்கு உதவிய வங்கி ஊழியர்களைப் பணி நீக்கம் வரை செய்துள்ளதாக நிதி புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது என்று தெரியுமா?
இன்று வரை 250 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வருமான துறையினர் நடத்திய சோதனையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பஜக தலைவர் சுஷில் வஸ்வானியிடம் இருந்து பெறும் தொகையை கைப்பற்றி உள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.