முன்பதிவு டிக்கெட்களுக்கு ஃப்ளெக்ஸி கட்டணம் முறையை அமல்படுத்த முயன்று வருகிறது. இதன் முதல் தொடக்கமாக பிரீமியம் ரயில்களில் சோதனை செய்யப்பட்டது.
இந்திய ரயில்வே நிறிவாகம் சென்ற சில மாதங்களாக முன்பதிவு டிக்கெட்களுக்கு ஃப்ளெக்ஸி கட்டணம் முறையை அமல்படுத்த முயன்று வருகிறது. இதன் முதல் தொடக்கமாக பிரீமியம் ரயில்களில் சோதனை செய்யப்பட்டது.
பீரிமியம் ரயில்கள்
இப்போது அதே முறையை ராஜ்தானி, சதாப்தி போன்ற பீரிமியம் ரயில்களிலும் அறிவிக்க உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தட்கல் டிக்கெட் முறையும் ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் இருந்து நீக்கப்படுகின்றது.
ப்ளெக்ஸி கட்டணம்
இந்த ப்ளெக்ஸி கட்டணம் முறையினால் ரயில் பயணிகளை கடைசி நிமிடம் வரை கவர இயலும் என்றும் இதனால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
சோதனை
ப்ளெக்ஸி கட்டணம் முறையை ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதன் மூலம் ரயில் புறப்படும் நாள் மற்றும் நேரத்தைப் பொருத்து 10 முதல் 50 சதவீதம் வரை டிக்கெட் கட்டணங்கள் உயரும் . இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 500 கோடி வரை வருமான ரயில்வேவுக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அடிப்படை கட்டண உயரும்
இந்த ப்ளெக்ஸி கட்டணம் 10 முதல் 50 சதவீதம் வரை அடிப்படை கட்டணத்தில் இருந்து மட்டுமே உயரும். அதே நேரம் முன்பு இருந்ததைப் போன்று முன்பதிவு கட்டணம், சேவை வரி போன்றவற்றை செலுத்த வேண்டும் என்றும் 2016 டிசம்பர் 20-ம் தேதி முதல் ஆறு மாதம் வரை இந்த முறை சோதனை முறையில் அமலுக்கு வருகின்றது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பீரிமியம் ரயில்களின் தற்போதைய நிலை
செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை அறிவித்த இந்த ப்ளெக்ஸி கட்டண முறையினால் 5,871 சீட்டுகள் காலியாக இந்த ரயில்கள் பயணித்து தோல்வியைச் சந்தித்து உள்ளதை அடுத்து இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளது.
தட்கல் முறை நீக்கம்
ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் தட்கல் முறை நீக்கப்பட்டுள்ளதாகல் 10 சதவீதம் வரை பயணிகள் ரயில் கட்டணங்களில் இருந்து சேமிக்க முடியும். ஆனால் 10 முதல் 50 சதவீதம் வரை டிக்கெட் விலை ப்ளெக்ஸி கட்டண முறையினால் உயரும்.
ஆனால் மண்டல அலுவலகங்களில் தட்கல் முறை நீக்கம் குறித்து ஆலோசித்த பிறகு 30 சதவீதம் வரை தட்கல் டிக்கெட் முறைக்கு ஒதுக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications