2016ஆம் ஆண்டில் இந்திய வங்கித்துறை நேர்ந்த கொடுமைகள், 2017ஆம் ஆண்டில் தீரும்.
2016ஆம் ஆண்டின் இறுதி நாட்களை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு இந்திய வணிகச் சந்தைக்குச் சிறந்த ஆண்டு என்று சொல்லுவதற்கு இயலாது, காரணம் இந்திய வங்கிகளின் மோசமான நிலை.
இந்த ஆண்டில் இந்திய வங்கித் துறை வராக் கடன் உயர்வு, ரிசர்வ் வங்கி கவர்னர் மாற்றம், புதிய கவர்னரின் கொள்கை மாற்றம், நாணய கொள்கையை வடிவமைக்கப் புதிய அமைப்பு, பணவீக்கத்தில் நிலையற்ற தன்மை, ஏற்றுமதியில் சரிவு, ரூபாய் மதிப்புச் சரிவு எனப் பல பாதிப்புகளை எதிர்கொண்டது.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு இந்திய வங்கித்துறைக்கு எப்படி இருக்கும்.? என்பதை அடுத்த ஆண்டில் ஏற்படப்போகும் மாற்றங்களை வைத்தே நீங்கள் கணித்துவிடலாம்.
மாற்றம் 1
2017ஆம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக 10 சிறு வங்கிகள் மற்றும் 8 பேமெண்ட் வங்கிகள் இந்திய சந்தையில் புதிதாகக் களமிறங்க உள்ளது. இதன் மூலம் இந்திய வங்கித்துறையில் வர்த்தகத்திற்கான போட்டி கடுமையாகும்.
மேலும் இந்திய கிராமப்புறங்களில் அதிகளவிலான வங்கி சேவைகள் எதிர்பார்க்க முடியும். இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவும் பணப் பரிமாற்றத்தில் புதிய உச்சத்தை அடையும்.
மாற்றம் 2
2017ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்குள் நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கிளை வங்கிகளுடன் இணைய உள்ளது. இதன் வாயிலாக உலகின் 50 மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இடம்பெறப் போகிறது.
இந்த இணைப்பின் மூலம் இப்புதிய கூட்டணி வங்கியின் வர்த்தகமும் சரி, வருவாய் அளவுகளும் சரி மிகப்பெரிய உச்சத்தை அடையும். இது இந்திய வங்கித்துறைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
மாற்றம் 3
இந்திய வங்கித்துறைக்குத் தற்போது மிகப்பெரிய தலைவலியாக்க இருப்பது வராக் கடன்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி 2015ஆம் ஆண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்பட்ட வராக் கடனை கடனக்கிட்டு மார்ச் 2017ஆம் ஆண்டுக்குள்ள முழுமையாகத் தீர்க்க அனைத்து வணிக வங்கிகளுக்கும் ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய வங்கித்துறை சந்தையில் மேலும் ஸ்திரதன்மையை அடையும்.
மாற்றம் 4
இந்தியாவில் கள்ள நோட்டு மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு நாட்டின் பணப் புழக்கத்தில் 84 சதவீத இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்துள்ளனர்.
இதன் வாயிலாக இந்தியாவில் மைக்ரோ பைனாசிங் சேவை மற்றும் பரிமாற்றங்கள் மக்களால் ஆதரிக்கப்பட்டு வருகிறது. இது இந்திய சந்தைக்குப் புதிய பரிமாற்ற முறை. இதன் மூலம் பல புதிய வர்த்தகச் சந்தை உருவாகவும் வாய்ப்புகள் உண்டு.
மாற்றம் 5
500 மற்றும் 1000 ரூபாய் தடையின் மூலம் மக்களின் பணப் பரிமாற்ற முறை அதிகளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து அரசு மற்றும் தனியார் அமைப்புகளும் இதனை நோக்கிய ஒரு மாற்றத்திற்கு வர முடிவு செய்துள்ளனர்.
இந்த மாற்றம் டிஜிட்டல் மயமான பொருளாதாரத்திற்கு ஒரு துவக்கம். இதன் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வருவாய்க் கிடைப்பது மட்டும் அல்லாமல் கணக்கில் காட்டக்கூடிய வருவாய் அளவுகளும் அதிகரிக்கும் எனவே வரி வருமானமும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
மாற்றம் 6
இத்தகைய மாற்றங்கள் மூலம் இந்திய பங்குச்சந்தையில் வங்கித் துறை பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்திக்க உள்ளது. இதன் அன்னிய முதலீட்டாளர்கள் மூலம் இந்திய சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகரிக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications