2015ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 2016ஆம் ஆண்டுச் சின்னாபின்னமானது.
2015ஆம் ஆண்டில் இந்தியாவில் துவங்கப்படும் பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குப் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தாராளமாக முதலீடு செய்தனர். இதன் எதிரொலியாகவே புதிய நம்பிக்கையாகத் திகழ்ந்தது.
ஆனால் 2016ஆம் ஆண்டில் கதையே வேறு..
ஒரே வருடம்
2015ஆம் ஆண்டில் மிகப்பெரிய முதலீடுகளுடன் துவங்கப்பட்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 2016ஆம் ஆண்டும் மிகவும் குறைவான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தினால் சுமார் 212 நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இது கடந்த வருடத்தை விடவும் 50 சதவீதம் அதிகமாகும்.
2015ஆம் ஆண்டின் நிலவரம்
டேட்டா அனலிடிக்ஸ் நிறுவனமான டிராஸான் செய்த ஆய்வின் படி 2015ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 140 நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் 2016ஆம் ஆண்டில் 212 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதா தெரிவித்துள்ளது.
பெப்பர்டேப்
2015ஆம் ஆண்டில் பிக் பேஸ்கட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாகத் திகழ்ந்த பெப்பர் டேப் நிறுவனம் 2014ஆம் ஆண்டு இறுதியில் 51 மில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய முதலீட்டுடன் துவங்கப்பட்டது.
ஆனால் 2016ஆம் ஆண்டில் இந்நிறுவனம் முழுமையாக முடங்கியது.
10க்கு 7 காலி..
2014ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது என்று ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறித்த ஆய்வுகள் கூறுகிறது.