பழைய ரூபாய் நோட்டுகளை மற்ற முடியாது: பொதுமக்களை ஏமாற்றிய ஆர்பிஐ

பழைய ரூபாய் நொட்டுகளை மாற்றப் பிரதமர் மோடி அறிவித்த 50 நாட்களுக்குள் மாற்ற முடியவில்லை என்றால் என்ஆர்ஐ மற்றும் வெளிநாட்டிற்குச் சென்று இருந்தால் மட்டுமே மத்திய வங்கி மாற்ற அனுமதிக்கின்றது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ வங்கிகளில் மாற்றச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பழைய ரூபாய் நொட்டுகளை மாற்றப் பிரதமர் மோடி அறிவித்த 50 நாட்களுக்குள் மாற்ற முடியவில்லை என்றால் என்ஆர்ஐ மற்றும் வெளிநாட்டிற்குச் சென்று இருந்தால் மட்டுமே மத்திய வங்கி மாற்ற அனுமதிக்கின்றது.

பொதுமக்கள் வாக்குவாதம்

பொதுமக்கள் வாக்குவாதம்

இதனால் பொதுமக்கள் பலர் தினமும் ஆர்பிஐ வங்கி காவலாளிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்து பிரதமர் மோடி அறிவிக்கும் போதே ஒரு வேலை ரூபாய் நோட்டுகளை 50 நாட்களுக்குள் மாற்ற முடியவல்ல என்றால் ஆர்பிஐ வங்கிகளில் மார்ச் 30-ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

ஆர்பிஐ அறிக்கை

ஆர்பிஐ அறிக்கை

அதுமட்டும் இல்லாமல் ஆர்பிஐ நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையிலும் 2016 டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாதவர்கள் குறிப்பிட்ட ஆர்பிஐ வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மத்திய வங்கியின் அறிவிப்பு

மத்திய வங்கியின் அறிவிப்பு

மத்திய வங்கியும் டிசம்பர் 31-ம் தேதி மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆர்பிஐ கிளைகளில் 50 நாட்கள் முடிந்த பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது.

மோடியின் அறிவிப்பு

மோடியின் அறிவிப்பு

நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களுக்கு இதுபற்றி அறிவித்து உரையாற்றும் போது சில காரணங்களால் டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் போகும் போது ஆரிஐ வங்கிகளில் பிரகடன படிவத்தை அளித்து 2017 மார்ச் 31-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கான விதிகள்

வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கான விதிகள்

என்ஆர்ஐ மற்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்துள்ள இந்தியர்கள் விமான நிலையத்தில் உள்ள கஸ்டம்ஸ் அதிகர்களிடம் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளைக் காண்பித்து பிரகண்ட படிவத்தில் கையெழுத்து வாங்கி வர வேண்டும் என்றும் அதற்குச் சமந்த பட்ட அதிகர்களின் ஸ்டாப் அச்சிடப்பட்டி இருக்க வேண்டும் ஆர்பிஐ கூறுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi people nri என்ஆர்ஐ
English summary

RBI turns away people wanting to exchange old notes

RBI turns away people wanting to exchange old notes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X