2017-ம் ஆண்டு பட்ஜெட் முன்கூடியே அறிவிக்க இருக்கும் நிலையில் உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உள்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கின்றது.
இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியோர் இன்று தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதே போன்று தமிழ் நாட்டில் இருந்து திமுகவும் தேர்தல் ஆணையத்துடன் புகார் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஏற்கனவே பிற அரசியல் கட்சிகளை தேர்தல் வரும் காரணத்தால் பட்ஜெட் ஏதும் தாக்கல் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.
தேர்தலுக்கு முன்பு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து அருண் ஜேட்லி குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது எதிர்க் கட்சிகள் செல்லா ரூபாய் நோட்டுகள் பிரிச்சனைகளில் எங்களை ஒருபக்கம் எதிர்த்துப் பேசி வரும் நிலையில் அவர்கள் பட்ஜெட் குறித்து ஏன் பயப்பட வேண்டும் என்றார்.
மார்ச் 2012 ஆம் ஆண்டு உத்திர பிரதேச தேர்தலின் போது பட்ஜெட் தள்ளிவைக்கப்பட்டது குறித்துக் கேட்கப்பட்ட போது அது மரபு அள்ள என்றும் அதனைப் பின்பற்ற தேவையில்லை என்றும் கூறினார்.
மேலும் லோக் சபா தேர்தலுக்கு முன்பு தான் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்றும், 2014-ம் அண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில நாட்களில் தான் நடைபெற்றது என்று தெரிவித்தார்.
இந்திய மரபுப் படி பிப்ரவரி 28-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை முன்கூடியே பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகின்றது.
இதேப் போன்று 2012-2013-ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தல் வந்த போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கீழ் நிதி அமைச்சராக இருந்த பிரனாப் முகர்ஜி பட்ஜெட்டை தேர்தலுக்குப் பிறகு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.