தொடர்ந்து குறைந்து வரும் பணப்புழக்கம்.. காரணம் 'ரூ.2000 நோட்டு'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2017ஆம் ஆண்டின் ஜனவரி 6ஆம் தேதி வரை இந்தியாவில் பணப்புழக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

 

இதன் மூலம் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக நீங்கிவிட்டது, நாட்டில் இயல்பு நிலை திரும்பியது என்று கூறிவந்தது தற்போது பொய்யாகிப்போனது.

 

ஜனவரி 6ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் இந்தியாவில் பணப்புழக்கம் 4.3 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இந்தத் தொடர் சரிவிற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டு தான்.

தொடர்ந்து குறைந்து வரும் பணப்புழக்கம்.. காரணம் 'ரூ.2000 நோட்டு'..!

பொதுவாகப் பணப்புழக்கம் என்பது வங்கிகள் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் பணத்தைக் கொண்டு கணக்கிடப்படும். டிசம்பர் 23ஆம் தேதியன்று பணப்புழக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டாலும், இதன் பின் தொடர் சரிவையே கண்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் சில்லறை வாங்க முடியாத காரணத்தால், நாட்டில் பணப்புழக்கம் அதிகளவில் குறைந்து காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Currency in circulation continues to contract

Currency in circulation continues to contract - Tamil Goodreturns
Story first published: Thursday, January 12, 2017, 13:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X