இலவச இணையம், அழைப்பு போன்ற அதிரடி ஆஃபர்களுடன் துவங்கிய ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் டிசம்பர் 31-ம் தேதி வரை 72.4 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
குறைந்த காலத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெறுவதே இலக்கு என்று துவங்கப்பட்ட ஜியோ நிறுவனம் மார்ச் மாதம் வரை இலவச இணையம் மற்றுன் அழைப்பு ஆஃபர்களை அளித்துள்ளது.
ஒரு நாளைக்கு லட்சம் வாடிக்கையாளர்கள்
ஒவ்வொரு நாளும் லட்சம் வாடிக்கையாளர்கள் தங்களது நெட்வொர்க்கில் இணைந்து வருவதாகவும், டிசம்பர் 31-ம் தேதி வரி 72.4 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாக இனைந்துள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் உத்தி மற்றும் திட்டமிடல் தலைவர் அன்ஷூமனாகத் தாகூர் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார். ஜியோ நிறுவனம் துவங்கப்பட்ட போது ஒரு நாளைக்கு 5 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய மற்றும் போர்ட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள்
புதிய வாடிக்கையாளர்கள் எத்தனை பேர், போர்ட் முறையில் எத்தனை பேர் இணைந்துள்ளதாகக் கேட்ட கேள்விக்குச் சில வாடிக்கையாளர்கள் போர்ட் முறையில் இணைந்துள்ளதாகவும் ஆனால் அதிகமானோர் புதிய வாடிக்கையாளர்கள் என்று கூறினார்.
இண்டர்கனைக்ட் புள்ளிகள்
துவக்கத்தில் இருந்ததை விட இண்டர்கனைக்ட் புள்ளிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே 15 சதவீதமாக இருந்த அழைப்புத் துண்டிப்பு குறைந்து 5 சதவீதமாக உள்ளது என்று தாகூர் கூறினார்.
இந்திய பரப்பளவில் ஜியோ சேவை
இணைப்பை நாங்கள் தொடர்ந்து மெருகேற்றி வருவதாகவும் இது வரை 90 சதவீத இந்திய பரப்பளவில் ஜியோ சேவை கிடைக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலீடு
49,000 கோடி இப்போது வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 21,000 கோடி ஸ்பெக்டர்ம் வாங்க முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 30,000 கோடி ரூபாய் டிஜிட்டல் பணிகளுக்காகச் செய்யப்படுவதாகத் தலைமை நிதி அதிகாரி வி ஸ்ரீகாந்த் கூறினார்.