ஊழியர்கள் யாரும் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்றும், அவர்கள் அனைவரும் மேம்பட்ட புதிய திட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 8000-9000 ஊழியர்கள் வரை ஆடோமேஷனின் ஆதிக்கத்தால் பணியில் இருந்து விடுவித்துள்ளதாக மனித வளங்கள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஷங்கர் எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.
ஆனால் அந்த ஊழியர்கள் யாரும் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்றும், அவர்கள் அனைவரும் மேம்பட்ட புதிய திட்டங்களில் பணியாற்றி வருகின்றனர் என்றும் ஷங்கர் தெரிவித்தார்.
ஒவ்வொரு காலாண்டிற்கும்
பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற கிருஷ்ணமூர்த்தி ஷங்கர் ஒவ்வொரு காலாண்டும் நிறுவனத்தின் பல பிரிவுகளில் ஆடோமேஷன் அறிமுகப்படுத்தப்பட்டு 2000 ஊழியர்கள் வரை விடுவிக்கப்பட்டு புதிய பணிகள் அளிக்கப்படுவதாகவும் அதற்காக ஊழியர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுவதாகவும் ஷங்கர் தெரிவித்தார்.
பிலிப்ஸ்
2015 -ம் ஆண்டு பிலிப்ஸ் நிறுவனத்தின் பணியில் சேர்ந்த ஷங்கர் அங்கும் பல பிரிவுகளில் ஆடோமேஷன் முறையைச் செயல்படுத்தினார். அதனால் அங்கு ஊழியர்கள் பணிக்கு எடுக்கப்படுவது குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.
வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறைப்பு
ஊழியர்களைப் பணியில் எடுப்பது இன்ஃபோசிஸ் நிறுவனத்திலும் குறைக்கப்பட்டு வருகின்றது, சென்ற ஆண்டு இதே நேரத்தில் 17000 ஊழியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த ஆண்டோ 5700 ஊழியர்கள் மட்டுமே பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.
விப்ரோ
பிபிஓ, ஐடி சேவை அளிக்கும் நிறுவனங்களிலும் ஆடோமேஷனின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது, அன்மையில் விப்ரோ நிறுவனமும் ஹோல்ம்ஸ் என்ற பெயரில் ஆடோமேஷன் செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விப்ரொ நிறுவனத்தில் 3,200 ஊழியர்கள் அவர்களது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அது நடப்பு நிதி ஆண்டில் 4,500ஊழியர்கள் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications