மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்திய நிதித்துறை மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வருவமான வரித்துறை ஒருபுறம் மக்கள் மத்தியில் இருக்கும் கருப்புப் பணத்தைக் களைய பல திட்டங்களைத் தீட்டி வரும் நிலையில், மறுபுறம் அவர்களுக்கான தண்டனை மற்றும் அபராதம் வழங்கக் கடுமையான சட்டதிட்டங்களை உருவாக்கி வருகிறது.
இதற்காக வருமான வரி சட்டதிட்டங்களின் கீழ் புதிய திட்டத்தைக் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் எனத் தெரிகிறது.
வருமான வரித்துறை
நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் நடந்த பணபரிமாற்றத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கண்டறியப்பட்ட 1.5 லட்ச வங்கி கணக்காளர்களிடம் வருமான வரித்துறை ஏற்கனவே விசாரணையைத் துவங்கிய நிலையில், தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
சரியான பதில்
வருமான வரித்துறை கேட்கும் கேள்விகளுக்குச் சரியான மற்றும் நம்பதகுந்த பதிலை அளிக்க வேண்டும் இல்லை என்றால், நண்பர்களிடம் வாங்கிய கடன், பரிசுகள், நன்கொடை, பரம்பரை நகைகள், வீடுகளில் செய்யப்பட்ட செய்யப்பட்ட செலவுகள் வரை அனைத்தையும் கேள்வி கேட்டகப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
அபராதம்
வருமான குறித்த விசாரணையில் பதில்கள் வெளிப்படையாக இல்லையெனில் 83 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
தற்போது அபராத அளவு 35 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை
ஆனால் இதுவரை இப்புதிய அபராத அளவுகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளவில் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அபராத மற்றும் விசாரணை முறைகளைக் கடுமையாக்கப்படுவதன் மூலம் இந்தியாவில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்க முடியும் என வருமான வரித்துறை நம்புகிறது.
கணக்கீட்டு
வருமான வரித்துறை சட்டம் 115BBEயின் கீழ் தற்போது 30 சதவீதமாக இருக்கும் வரி விதிப்பு அளவுகள் 60 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து 15 சதவீத கூடுதல் கட்டணம் 3 சதவீத செஸ் வரி ஆகியவற்றுடன் சேர்த்து 10 சதவீத அபராதம் விதிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் வருமான வரித்துறையில் சிக்கும் தொகையில் 83.25 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
தவறாக பயன்படுத்துதல்
இந்நிலையில் இப்புதிய சட்டத்தை வருமான வரித்துறை தவறாக பயன்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications