நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் அடுத்த 5 வருடத்தில் சுமார் 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீட்டுக்கான சில திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் அரசு கட்டிடங்கள் மேல் டெலிகாம் டவரை நிறுவ ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் அனுமதிக்காக இம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பார்தி மிட்டல்
இப்புதிய முதலீட்டுத் திட்டத்தைக் குறித்துச் சர்வதேச வர்த்தகக் கூட்டம் 2017இல் பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் பார்தி மிட்டல், "இது நாள் வரையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த 5 வருடங்களில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது" எனக் கூறினார்.
வோடபோன்
வோடபோன் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் அடுத்த 3 வருடத்தில் 3,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய வோடபோன் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
2 கோடி வாடிக்கையாளர்கள்
கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க வட்டங்களில் வோடபோன் நிறுவனம் சுமார் 2 கோடி மொபைல் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர் மாநாட்டு
மேற்கு வங்க மாநிலம் நடத்திய சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் வாயிலாகப் பொருளாதாரத்தில் தேக்க நிலையிலும் இருக்கும் நிலையிலும் சுமார் ரூ. 2.35 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!



Click it and Unblock the Notifications