2016ஆம் நிதியாண்டில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் லாபம் 15.5 சதவீதம் அதிகரித்து 249 கோடி ரூபாயாக உள்ளது.
இக்காலகட்டத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருவாய் 8 சதவீதம் அதிகரித்து 4,723 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, மேலும் ஏற்றுமதியின் அளவு 11 சதவீதம் அதிகரித்து 2,942 ஆக உயர்ந்துள்ளது.
நடு மற்றும் கனரக வாகன பிரிவில் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் மொத்த விற்பனை அளவு 23,176 ஆக இருந்த நிலையில் தற்போது 25,285 ஆக உயர்ந்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், வர்த்கத்தில் மிகப்பெரிய சவால் சந்தித்தோம் என அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வினோத் கே.தசாரி கூறினார்.