மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி 2016ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 4,500 ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது.
இக்காலாண்டில் எச்டிஎப்சி வங்கியின் வருமானத்தின் அளவு 18 வருடச் சரிவை எட்டியுள்ள நிலையில், செலவுகளை அதிகளவில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இவ்வங்கியில் பல மாற்றங்களைக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஆபத்துக் காத்துக்கொண்டு இருக்கிறது.
ஊழியர்கள் பணிநீக்கம்
இந்தியாவில் எந்தொரு வங்கியும் செய்ய அளவிற்கு ஒரே காலாண்டில் 4,500 ஊழியர்களை வெளியேறியுள்ளது மட்டும் அல்லாமல் புதிதாகப் பணியாளர்களை அமர்த்தும் எண்ணிக்கையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது எச்டிஎப்சி வங்கி.
பணமதிப்பிழப்பு
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் இயல்பான வளர்ச்சி அளவை எட்ட இன்னும் பல மாதங்கள் ஆகும் எனக் கணித்துள்ள எச்டிஎப்சி வங்கி, இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு தனது வங்கி செயல்பாட்டில் பல பணிகளை ஆட்டோமேஷன் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக ஊழியர்களின் தேவையும், நிறுவனத்தின் செலவினங்களும் குறைந்துவிடும் எனக் கணித்துள்ளது எச்டிஎப்சி வங்கி.
பதில்
4,500 ஊழியர்களின் வெளியேற்றத்தில் முழுமையாக வங்கி நிர்வாகம் காரணம் இல்லை, இயல்பான ஊழியர்களின் வெளியேற்றமும் இதில் அடங்கும். மேலும் வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த புதிய ஊழியர்களின் சேர்ப்பை குறைத்துள்ளோம் என்று எச்டிஎப்சி தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
செப்டம்பர் காலாண்டில் 95,002 ஆக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் காலாண்டில் 90,421 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் எச்டிஎப்சி வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அளவிற்குக் குறைந்துள்ளது.
ஐடி மட்டும் அல்ல
இந்தியாவில் ஐடி துறை மட்டும் அல்லாமல் ஐடி துறை சேவைகளைப் பயன்படுத்தும் பிற துறைகளும் ஆட்டோமேஷனில் இறங்கியுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பளம் மற்றும் செலவுகளைக் குறைக்க முடியும்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications