இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்தான ரயில்வே துறையில், இனி பயணிகள் டிக்கெட் தொகையில் சலுகையைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிக்க உள்ளது.
92 வருடங்கள்
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும் 92 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் சேர்த்து ஒற்றை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது.
50 பிரிவுகள்
இந்திய ரயில்வே துறை 50க்கு மேற்பட்ட பிரிவுகளில் அதாவது மூத்த குடிமக்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், நோயாளிகள், விளையாட்டு வீரர்கள், வேலையில்லாதோர், அர்ஜூனா விருது பெற்றவர்கள் எனப் பல பரிவுகளின் கீழ் பயணச்சீட்டுகளில் சலுகைகளை வழங்கி வருகிறது.
ஆதார் அட்டை
இச்சலுகையைப் பெற இனி பயணிகள் கட்டாயமாக ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சலுகையை முறைகேடாகப் பயன்படுத்துவது குறையும், மேலும் சரியான நபருக்கு மத்திய அரசின் சலுகைகளைச் சேர்க்க முடியும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சோதனை
தற்போது இத்திட்டத்தின் பணிகளை மூத்த குடிமக்கள் வாயிலாக இந்திய ரயில்வே துறை பரிசோதனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
1,600 கோடி ரூபாய்
2015-16 நிதியாண்டில் சலுகைகள் பெற்ற டிக்கெட் தொகை மட்டும் 1,600 கோடி ரூபாய் என்ற புள்ளிவிவரத்தையும் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய அரசு இதுவரை சுமார் 100 கோடி பேருக்கு ஆதார் அட்டையை வழங்கியுள்ளது. இதனால் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவதில் மூலம் எவ்விதமான இடர்பாடுகளும் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்புகள் 2017-18 பட்ஜெட் அறிக்கையில் பார்க்கலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications