டெல்லி: மத்திய அரசு நவம்பர் 8ஆம் தேதியன்று இந்தியாவில் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கி கணக்குகளில் அதிகளவில் வைப்பு செய்தனர். இதனுடன் பலர் தங்களிடம் மிகுதியாக இருக்கும் பணத்தை மத்திய அரசால் இலவசமாகத் துவங்கப்பட்ட ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்தனர்.
இதன் மூலம் நவம்பர் 8ஆம் தேதிக்கு பின்னான, ஒரு மாத காலத்தில் ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் சுமார் 29,000 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு வைப்புக் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
29,000 கோடி ரூபாய்
நவம்பர் 8 முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் ஜன் தன் வங்கி கணக்குகளில் மட்டும் 28,973 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டு, இதன் வைப்பு நிதி அளவீடுகள் வரலாறு காணாத அளவான 74,610 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என நிதியமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தடாலடியாகக் குறைவு..
இந்நிலையில் டிசம்பர் 7 முதல் ஜனவரி 11 வரையிலாகக் காலத்தில் வைப்புச் செய்யப்பட்ட நிதியின் அளவீடுகள் 5,582.83 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மொத்த வைப்பு நிதியின் அளவுகளும் 69,027.17 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜன் தன் வங்கி கணக்குகள்
தற்போதைய நிலையில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் கீழ் சுமார் 26.68 கோடி வங்கி கணக்குகள் இயங்கி வருகிறது.
கட்டுப்பாடுகள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஜன் தன் வங்கிக் கணக்குகளின் பணப் பரிமாற்ற அளவீடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் பின் படிப்படியாக இதன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நவம்பர் 30க்குப் பின் ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் வித்டிராவல் அளவு, அதிகப்படியாக 50,000 ரூபாய் வைப்பு நிதியின் அளவு எனத் தற்போது கட்டுப்பாடுகளாக உள்ளது.
வருமான வரித்துறை
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின் அதாவது நவம்பர் 9ஆம் தேதிக்கு முன் ஜன் தன் கணக்குகளின் வைப்பு நிதியின் அளவுகள் 45,637 கோடி ரூபாயாக இருந்தது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications