இந்த ஆண்டுக் குடியரசு தின அணிவகுப்பில் இந்திய பிரதமரின் விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியின் இளவரசர், இந்த ஆண்டுக் குடியரசு தின அணிவகுப்பில் இந்திய பிரதமரின் விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவர் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்க $75 பில்லியன் மதிப்பிலான திட்டங்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தப் பணக்கார குடியரசு தின விருந்தினர் பற்றி 10 சுவாரஸ்யமான விஷயங்கள்
இவர் யார்?
இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் தளபதி ஆவார். அவர் மறைந்த ஷேக் சயத் பின் சுல்தான் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் ஜனாதிபதியாக இருந்தவரின் மகன் ஆவார்.
ஷேக் முகமது, ஷிக்கா ஷல்மா பின்ட் ஹம்தான் அல் நஹ்யானுடன் திருமணம் ஆகி நான்கு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர்.
கல்வி
அவர் தனது 18 வயது வரை அபுதாபி மற்றும் அல்ஐன் பள்ளிகளில் கல்வி கற்றார், பின்னர் அவர் மதிப்புமிக்க ராயல் மிலிட்டரி அகாடமி சண்டர்ஸ்ட்டில், சேர்ந்தார்.
அங்கு ஆயுதப் பயிற்சி, ஹெலிகாப்டரில் ஒட்டுவது, பாராசூட்டுடன் குதிப்பது போன்ற பயிற்சியைப் பெற்றார்.
பல்கலை வித்தகர்
யுஏஇ ஆயுதப் படைகளின் துணைத் தலைமைத் தளபதியாக உள்ள அவர் தற்பொழுது யுஎயி விமானப்படையின் தலைமை தளபதி (ஐக்கிய அரபு எமிரேட் சிறப்புப் பாதுகாப்புப் படை) மற்றும் பைலட்டாக இருந்து வருகிறார்.
அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராணுவத்தில் பல பொறுப்பான பதவிகள் வகித்துள்ளார்.
அவர் ஒரு எமிரேட் அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலையிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய அளவிலும் பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புகள்
ஷேக் முகமது அபுதாபி கல்வி தரத்தினை அதிகரிக்க அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு பலராலும் அறியப்படுகிறது. அவர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், மதிப்புமிக்கக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவாளர்களை உருவாக்குவதிலும் அந்நாட்டின் முக்கியக் கருவியாகத் திகழ்கிறார்.
ஆர்வம்
அவர் குறிப்பாக அந்தப் பகுதியில் பிரபலமான நபாதி பாணி கவிதையில் அலாதி பிரியம் கொண்டவர்.
பிந்தைய எண்ணெய் பொருளாதாரம்
அவர் தனது நாட்டின் முதலீடுகள் எண்ணெய் பொருளாதாரத்தைத் தாண்டி பல புதிய மற்றும் வேறுபட்ட துறைகளில் இருக்குமாறு பார்த்து வருகிறார். மேலும் அவர் மிகப் பெரிய அரசாங்க நிதியத்தை ஒரு சொந்தமாக நிர்வகித்து வருகிறார்.
ஆர்வம்
வேட்டையாடுவது மற்றும் பருந்துகள் வளர்ப்பதில் அவருக்கு மிகப்பெரிய அளவிலான ஆர்வம் உள்ளது. அவர் இது அவருடைய தந்தையிடம் இருந்து அவருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தலைவராக இல்லாத போதும்
பிரதமர் மோடி யுஎயி-யை பற்றிய அவரது பொருளாதார விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயணத்தை இந்தியா ஆதரித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக எந்த மாநில அல்லது எந்த ஒரு அரசு தலைமையிலும் இல்லாத ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு, குடியரசு தினத்தன்று சிவப்பு கம்பள தீட்டப்பட்டது ஏன் என்பது புரிந்து கொள்ளலாம்.
MBZ
MBZ, என்று அவர் பிரபலமாக அறியப்படும் இவர், கச்சா எண்ணெய் அதிகளவில் ஏற்றுமதி செய்யும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டை ஆளும் தலைவர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications