இந்தியாவில் ஆதார் அட்டை அனைவருக்கும் கிடைத்துள்ள நிலையில் இதனை மேலும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு மூத்த குடிமக்கள் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் சோதனை திட்டமாக இந்தியாவில் 15 மாவட்டங்களில் மட்டுமு செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மருத்துவச் சேவையை மேம்படுத்த மருத்துவ உபகரணங்கள் துறையில் முதலீடு ஈர்க்கப்படும் என நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் உறுதி அளித்தார். மேலும் மருத்துவ உபகரண விலை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோல் இந்தியாவிலேயே மிகமுக்கியமான அரசு மருத்துவமனையான டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல் குஜராத் மற்றும் ஜார்கண்டில்லும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.