டெல்லி: கடும் அமளிக்கு மத்தியில் துவங்கப்பட்ட பட்ஜெட் கூட்டம், 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை முழுவதும் நாட்டின் ஊரக மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பட்ஜெட் 2017 மூன்று மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது
1. ஒரு மாதம் முன்கூடியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2. இதன் மூலம் மத்திய அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மார்ச் மாத முதலே செலவு செய்யத் துவங்கலாம். இதன் அடுத்தச் சில வருடங்களில் மத்திய அரசு நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.
3. 92 வருடங்களாகத் தனியாகத் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் இந்த வருடம் மத்திய பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டு ஒன்றை பட்ஜெட் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தின் இன்ஜினாக இந்தியா உள்ள நிலையில் இதன் மேலும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல இந்த நிதியாண்டில் வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்கப்படும்.
ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியின் புதிய திட்ட வடிவங்கள் வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்.
எப்போது இல்லாத வகையில்ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.