டெல்லி: வெளியுறவு அமைச்சகத்தின் மாநில அமைச்சரான இ.அகமத் இன்று மாரடைப்புக் காரணமாக டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் மரணமடைந்தார். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இவர் தனது பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இ.அகமத் மத்திய அமைச்சராக மட்டும் அல்லாமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகவும் உள்ளார். இன்று காலை 2.15 மணிக்கு டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செயற்கை சுவாசம் அளிக்கப்படும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அகமத் அவர்களின் மறைவின் காரணமாகப் பட்ஜெட் தாக்கல் இன்று செய்யக்கூடாது எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது, மேலும் திரினாமுல் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா..? 3 வாய்ப்புகள் உள்ளது.
1. பட்ஜெட் தாக்கல் ஒத்திவைக்கலாம்.
2. நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்துவிட்டுப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம்.
3. அருண் ஜேட்லி பேச்சு உரை இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம்.