அனைவருக்கும் வீட்டுக் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் சாமானிய மக்களுக்கு அதிகம் பயன்படும் வகையில் மத்திய அரசு பிரதமர் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தை உருவாக்கியது.
இத்திட்டத்தின் கீழ் இந்திய ஊரக மற்றும் கிராமப்புறத்தில் வீடு கட்ட வரும்புவோர் வீட்டுக் கடனுக்கான வட்டியில் தளர்வுகளைப் பெறலாம், இத்திட்டத்தின் அறிமுகம் முதலே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில்.
இத்திட்டத்தை மேலும் விரிவாக்கவும், அதிகமானோருக்குக் கடன் சலுகை அளிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பட்ஜெட் 2017 அறிக்கையில் மத்திய அரசு பிரதமரின் வீட்டு கடன் திட்டத்திற்குப் புதிதாக 23,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் ஊரக மற்றும் கீராமபுறத்தில் ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.