2017-18 பட்ஜெட் அறிக்கையில் பெரிய அளவில் பேசப்படாத ஒரு விஷயம் என்றால் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு.
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், 2017-18 நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டுப் பட்ஜெட்டில் மொத்த செலவினங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் 2016-17ஆம் நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ. 4.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் 2017-18 நிதியாண்டிற்கு இந்திய பாதுகாப்பு துறைக்கு 2.74 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.
மேலும் இந்த நிதியாண்டில் பல நாடுகளில் இருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.