மும்பை: புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2017இல் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் குறித்து எவ்விதமான அறிவிப்புகளையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் அறிக்கையில் வெளியிடவில்லை.
இதனால் என்ஆர்ஐகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கடந்த நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் என்ஆர்ஐகளுக்குச் சில வரி சலுகையை அறிவித்த மத்திய அரசு இந்த முறை எவ்விதமான அறிவிப்புகளையும் அறிவிக்கவில்லை. மேலும் என்ஆர்ஐ தொடர்பான அனைத்து நிதி சார்ந்த விஷயங்களும் ரிசர்வ் வங்கி நேரடியாகக் கவனித்து வருகிறது.
2016-17ஆம் நிதியாண்டில் பான் கார்டு இல்லாத என்ஆர்ஐகளுக்கு மொத்த வருமானத்தில் வரிப் பிடித்தம் அளவுகளை மத்திய நிதியமைச்சகம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிக வரி விதிப்பில் இருப்பது என்ஆர்ஐகள் தான். என்ஆர்ஐ குறித்த பிற முக்கியச் செய்திகளைப் படிக்க இதைக் கிளிக் செய்யவும்.