வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் இனி காலதாமதமாக வரி தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். ஆனால் அது நடப்பு நிதி ஆண்டில் அல்ல, 2018-2019- நிதி ஆண்டு முதல்.
நிதி மசோதா 2017-ன் படி புதிய பிரிவு 234F-ன் கீழ் வருமான வரிச் சட்டத்தில் சரியான நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 2018-2019-ம் நிதி ஆண்டு முதல் அபராதம் விதிக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு விதமான அபராதம்
முறையான தேதிகளில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 5000 ரூபாய் அபராதம் என்றும், இதுவே டிசம்பர் 31-ம் தேதியும் கடந்து செல்லும் போது 10,000 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும்.
யாருக்கெல்லாம் அபராதம் குறைய வாய்ப்பு
எனினும் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமான உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான அளவில் மட்டுமே வருமான செலுத்த வேண்டி வரும் என்று கூறப்படுகின்றது.
எதற்காக இந்த அபராத முறை
வரி இணக்கத்தை மேம்படுத்த மற்றும் முறையாகச் சரியான நேரத்தில் வரி செலுத்துவதை அதிகரித்து, தேவையான வழிகளில் செலவிடவே இப்படிப்பட்ட முடிவு எடுக்கக் காரணமாக இருக்கின்றது என்று வருமான வரித்துறையினர் கூறுகின்றனர்.
எப்போது முதல் அபராதம்
இந்த மசோதா 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதன் பிறகு அனைத்து நிதி ஆண்டுகளிலும் இந்த விதிகள் பின்பற்றப்படும் என்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.