இன்போசிஸ் நாராயணமூர்த்தி அதிக இந்தியர்களை அது போன்ற நாடுகளுக்கு அனுப்புவதை இந்திய நிறுவனங்கள் குறைக்க வேண்டும்.
இந்திய நிறுவனங்கள் பன்முகக் கலாச்சாரத்திற்கு மாற வேண்டும் என்றும் எச்1பி வசா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி டிரம்பிற்கு ஆதரவு அளித்து அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இன்று தனியார் நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி அதிக இந்தியர்களை அது போன்ற நாடுகளுக்கு அனுப்புவதை இந்திய நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்றும் உள் நாட்டினரை அதிகமாகப் பணிக்கு எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்த கேள்வியின் போது தெரிவித்தார்.
இந்த மென்பொருள் நிறுவனங்கள் பன்முகக் கலாச்சாரத்திற்கு மாற வேண்டும். அமெரிக்காவில் அமெரிக்கர்களையும், கனடாவில் கனடியர்களையும், பிரிட்டனில் பிரிட்டிஷ் மக்களையும் பணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இப்படிச் செய்தால் மட்டும் தான் முழுமையான பன்னாட்டு நிறுவனமாக மாற முடியும் என்றும் எனவே எச்-1பி விசாவை பயன்படுத்தி இந்தியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தவிர்க வேண்டும் என்றும் நாராயணமூர்த்திக் கூறினார். வேலைக்கு ஆட்கள் எடுப்பது உள்ளூரிலும், அவர்களுக்குப் பயிற்சி அளிக்க இந்தியர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். எச்-1பி விசா புதிய சட்டம் நிறைவேற்று அதிகார ஆணை வருகின்ற போது இந்திய நிறுவனங்கள் பன்முகக் கலாச்சாரத்திற்கு மாறும் என்றும் அதற்கு ஏற்றவாறு நாங்களும் மாறுவோம் என்றும் அதற்கான சிறந்த முயற்சியே இது என்று கருதுவதாதகுவும் நாராயணமூர்த்திக் கூறினார். இந்தியர்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள், ஆனால் பன்முகக் கலாச்சாரம் அவ்வளவு எளிதல்ல. இதற்காக நிர்வாகிகள் எப்படிச் சிறப்பான முயற்சிகளை எடுக்க வேண்டும், இதுவும் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு தான் என்றும், இந்திய நிறுவனங்கள் அரசின் சிக்கலை உணர்ந்து ரிஸ்க்கை தவிர்த்துக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். எச்-1பி விசா என்பது தற்காலிக குடியேற்ற விசா ஆகும். இதனைப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து ஊழியர்களைச் சில முக்கியப் பணிக்கு எடுத்துக்கொள்ள இயலும், ஆனால் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்த பிறகு தான் வெளிநாட்டில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் வருடத்திற்கு 10,000 பேருக்கும் அதிகமாக எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிக்கு அழைத்துச் செல்கின்றனர். புதிய எச்-1பி விசா மசோதாவால் 1,30,000 டாலர்கள் சம்பளமாக அளிக்க வேண்டும். ஆனால் முன்பு 60,000 டாலர்கள் சம்பளம் அளித்தால் போதும் என்று இருந்தது. இந்த மசோதா அதிகமாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதைக் குறைப்பதற்காகவும், அமெரிக்கர்களின் வேலையை உறுதி செய்வதற்காகவும் அமல்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
பன்முகக் கலாச்சாரம்
பன்னாட்டு நிறுவனம்
கருத்து
இந்திய நிறுவனங்கள் பன்முகக் கலாச்சாரத்திற்கு மாறும்
கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு
எச்-1பி விசா
புதிய எச்1பி விசா
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications