டெல்லி: இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி தலைமைவகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சில மாதங்களுக்கு முன்பு ஜியோ என்னும் டெலிகாம் சேவையைத் துவங்கியது.
இதன் அறிமுகம் தினத்திலேயே இந்நிறுவனம் 90 நாட்களுக்கு அனைத்துச் சேவைகளும் இலவசம் என அதிரிபுதிரியான ஆஃபரை அறிவித்துப் போட்டி நிறுவனங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டது.
இந்நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் பிற முக்கிய டெலிகாம் நிறுவனங்களாக ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியோர் இந்த இலவச ஆஃபர் முறைகேடானது என டிராய் அமைப்பிடம் புகார் அளித்தனர்.
இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கும் கட்டுப்படுத்தும் அரசு அமைப்பான டிராய், ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களின் புகார் ஏற்று ஜியோ நிறுவனம் இதுவரை அறிவித்துள்ள 2 ஆஃபர்களையும் ஆய்வு செய்தது. ஜியோ நிறுவனத்தின் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் ஆகிய இரண்டையும் ஆய்வு செய்ததில் எவ்விதமான விதி மீறல்களும், முறைகேடான சலுகைகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, ஜியோ ஆஃபர்களுக்குப் பச்சை கொடி காட்டியுள்ளது. இந்திய டெலிகாம் துறையின் விதிகள் படி புதிதாகச் சந்தையில் களமிறங்கியுள்ள நிறுவனங்கள் அறிமுக ஆஃபராக 90 நாட்கள் வரை மட்டுமே சலுகை திட்டங்களை வழங்க முடியும். ஜியோ அறிமுகத்தால் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் தான் டிராய் அமைப்பிடம் புகார் அளித்தது. ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் அறிவிக்கப்பட்ட காலத்தில் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் வாய்ஸ் கால் இணைப்பை அளிக்காமல் இண்டர்கனெக்டிங் பாயின்ட் பிரச்சனையைப் பல ஆலோசனை மற்றும் நிதி பங்கீடு மூலம் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிராய் ஆய்வு
பச்சைக் கொடி
90 நாட்கள்
ஏர்டெல்
இண்டர்கனெக்டிங் பாயின்ட்
இலவசங்கள் தொடரும்.
வோடபோன் - ஐடியா