விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக அனுமதி பெற்றனவா என்று கேள்வி கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு பேடிஎம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்களுக்குத் தங்களது விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக அனுமதி பெற்றனவா என்று கேள்வி கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
அபராதம்
ஒருவேலை இவர்கள் முறையான அனுமதி பெறாமல் தங்களது விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கூறியுள்ளது. இதனையே மேலும் இரண்டு அமைச்சகமும் உறுதி செய்துள்ளன.
பெயர் ஒழுங்கமுறை தடுப்புச் சட்டம்
நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் இது போன்று ஊடகங்களில் விளம்பரம் அளிக்கும் முன்பு முத்திரை மற்றும் பெயர் (ஒழுங்கமுறை தடுப்பு) சட்டம், 1950-ன் படி அனுமதி பெற வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது நிறுவனத்தின் வணிகச் சேவையைத் துவங்கும் போது அளித்த விளம்பரத்தில் ஒரு பக்கத்திற்குப் பிரமர் மோடியின் படத்தை அச்சிட்டு விளம்பரப்படுத்தியது அரசியல் வட்டத்தில் பெறும் சலசல்பு ஏற்பட்டு விவாதம் செய்யப்பட்டது.
பேடிஎம்
நவம்பர் 9-ம் தேதி பிரதமர் மோடி செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்ததை அடுத்தச் சில மணி நேரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அதனை வரவேற்று தங்களது நிறுவனத்தின் வாலெட்டுகள் விளம்பரத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மோடியின் புகைப்படத்தைப் பற்றி விமர்சித்த போது ‘இந்திய பிரதமர் சேல்ஸ் மேனாக மாறிவிட்டார்' என்று விமர்சித்தார்.
500 ரூபாய் அபராதமா..?
டிசம்பர் 3-ம் தேதி ஜியோ நிறுவனத்திற்கு மோடி புகைப்படத்தை விளம்பரத்தில் பயன்படுத்தியதற்காக 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications