தென் கொரியாவின் தொழில்நுட்ப நிறுவனமான சாமசங் 2017 அரையாண்டுக்குள் இந்தியாவில் மொபைல் பேமெண்ட் வாலெட் சேவையைத் துவக்க இருக்கின்றது என்று ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காகச் சாம்சங் நிறுவனம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான பணிகளில் இறங்கி உள்ளது.
போட்டி
சாம்சங் நிறுவனம் தனது மின்னணு வாலெட் அறிமுகப்படுத்தும் போது பேடிஎம் போன்ற வாலெட் நிறுவனங்கள் பெறும் போட்டியைச் சந்திக்க நேரிடும்.
சோதனை முயற்சி
சாம்சங் பே சேவைக்கான சேவையை இந்தியாவில் டிசம்பர் 2016 முதலே சோதனை முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் அடுத்தகட்டமாகச் சாம்சங் பே செயலியை இந்தியாவில் கேலக்ஸி நோட்5 ஸ்மார்ட்போனில் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் வசதிகள்
சம்சங் பே மேக்னெடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷனை ஆதரிக்கும், மேலும் ஸ்மார்ட்போன் மூலம் மேக்னடிக் சிக்னலினை பேமெண்ட்ஸ் டர்மினல் கார்டு ரீடருக்கு அனுப்பப் பயனர்கள் அனுமதிக்கப்படுவர்.
பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் பே அதிக விலையுள்ள பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வேலை செய்யும் என்றும் பயனர் அதிகமாகப் பெற முடியாது என்றும் கூறப்படுகின்றது.
கவுண்டர்பாயிண்ட் மார்க்கெட்டிங் ரிசர்ச் நிறுவனத்தின் படி சாம்சங் நிறுவனத்திற்கு 2.5 மில்லியன் கேலக்ஸி, S6, கேலக்ஸி, S6 எட்ஜ், கேலக்ஸி, S6 எட்ஜ் பிளஸ், கேலக்ஸி S7, உருக்கு கேலக்ஸி S7, எட்ஜ், மற்றும் கேலக்ஸி நோட்5 போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது.
வளர்ச்சி
செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்ததில் இருந்து பேடிஎம், மோபிவிக் போன்ற மின்னணு வாலெட்டுகள் நல்ல வளர்ச்சியைப் பெற்றன.