உலகளாவிய மென்பொருள் சேவையில் முன்னணியில் இருக்கும் ஆரக்கிள் நிறுவனம் தனது தலைமையிடமான அமெரிக்காவை விட்டுவிட்டு மிகப்பெரிய டெலப்மெண்ட் சென்டரை இந்தியாவில் உருவாக்க உள்ளது. எங்கே தெரியுமா..?
சென்னை: உலகளாவிய மென்பொருள் சேவையில் முன்னணியில் இருக்கும் ஆரக்கிள் நிறுவனம் தனது தலைமையிடமான அமெரிக்காவை விட்டுவிட்டு மிகப்பெரிய டெலப்மெண்ட் சென்டரை இந்தியாவில் உருவாக்க உள்ளது. எங்கே தெரியுமா..?
அதே இடம் தான்..!
இந்திய மென்பொருள் சந்தைக்குத் தலைமையிடமாக விளங்கும் பெங்களுரில் தான் ஆரக்கிள் நிறுவனத்தின் புதிய டெவலப்மென்ட் சென்டர் அமைக்கப்பட உள்ளது.
ஆமெரிக்கச் சந்தையில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்கப் பல காலம் ஆகும் என உண்மையை உணர்ந்த ஆரக்கிள் பல மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த இந்தியாவில் புதிய புதிய டெவலப்மென்ட் சென்டர் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தற்போது இருக்கும் விசா பிரச்சனையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தியுள்ள ஆரக்கிள்.
முதலீடு
அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு மிகப்பெரிய அளவில் மென்பொருள் சேவை அளித்து வரும் ஆரக்கிள் பெங்களுரில் சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்து மிகப்பெரிய அளவிலான ஒரு டெவலப்மென்ட் சென்டரை துவங்க உள்ளது.
இதனைக் கொண்டு இந்தியா மட்டும் அல்லாமல் ஆசிய சந்தையில் புதிய வர்த்தகத்தைப் பிடிக்கவும் ஆரக்கிள் முடிவு செய்துள்ளது.
வேலைவாய்ப்பு
இப்புதிய டெவலப்சென்டர் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என் ஆரக்கிள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2வது பெரிய நிறுவனம்
மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்வது ஆரக்கிள், இந்நிறுவனம் டேட்டாபேஸ், கிளவுட் சேவைக்கான மென்பொருள் தயாரிப்பதையும், அதற்கான புதிய தொழில்நுட்பத்தைத் தயாரிப்பதை பிரதானமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
3 வருடம்
இப்புதிய டெலப்மெண்ட் சென்டர் முழுமையாக இயங்க இன்னும் 3 வருடங்கள் ஆகும். அதேவேளையில் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவு செய்துள்ளது ஆரக்கிள்.

More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications