புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டில் நிறையப் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாகவும், அதனால் கள்ள நோட்டுகள் அச்சடிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது.
ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளில் எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லை என்றும், அதே போன்று கள்ள நோட்டு அடிப்பது மிகவும் எளிது என்றும் ஏற்கனவே ரூபாய் நோட்டுகளில் உள்ளதைப் போன்று குறியீடுகள் மட்டுமே இருபதாகவும் இப்படிப் பட்ட கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அது மட்டும் இல்லாமல் மேற்கு வங்கத்தில் 500, 600 ரூபாய் நல்ல பணம் கொடுத்தால் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுவதாகவும் கூறி வரும் நிலையில் நீங்கள் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டு கள்ளப்பணமா என்று ப்படி கண்டறிவது என்று இங்குப் பார்ப்போம்.
ஏழு வரி
ஏழு கோணங்களுடையது கசிவு வரி இடதுபக்கம் மற்றும் வலது பக்கம் என இரு பக்கங்களிலும் இருக்கும்.
ஆர்பிஐ
மகாத்மா காந்தி படத்தில் ஆர்பிஐ என்று எழுதப்பட்டு இருக்கும், இதனைப் பூதக்கண்ணாடியின் உதவியுடன் மட்டுமே பார்க்க இயலும்.
பாதுகாப்பு நூல்
வண்ண மாற்றுவதால் பாதுகாப்பு நூலில் பாரத் என ஹிந்தியிலும் ஆர்பிஐ மற்றும் 2000 எனவும் பொரிக்கப்பட்டு இருக்கும். நொட்டை அசைக்கும் போது பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு மாறும்.
2,000 என எழுத்துரு
குறிப்பிட்ட அளவிலான விளக்கின் வெளிச்சத்தில் பார்க்கும் போது 2,000 என எழுத்துரு பொரிக்கப்பட்டு இருக்கும்.
45 டிகிரி கோணத்தில் பார்க்கும் போது 2,000 என மறைவிம்பம் காணப்படும்.
நீர்க் குறி படம்
மகாத்மா காந்தியின் நீர்க் குறி படமும், 2000 என மின்தட்டச்சும் செய்யப்பட்டு இருக்கும்.
ரூபாய் நோட்டின் வரிசை எண்ணின் எழுத்துக்கள் சிறிய எண்ணாகத் தொடங்கி பெரிதாகப் பொரிக்கப்பட்டு இருக்கும்.