ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன மூன்று முன்மொழியப்பட்ட ஒப்பந்தங்களை 2017 அரையிறுதியில் முடிக்கும் என்றும் அதில் ஏர்செல் இணைப்பும் அடங்கும் என்று கூறப்படுகின்றது.
அணில் அம்பானி தலைமையிலான தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃபாரா டெல் நிறுவனத்திற்கு 51 சதவீத பங்குகளை விற்க முடிவுசெய்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் டவர் பிரிவை கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனத்திற்கு 11,000 கோடி ரூபாய்க்கும் விற்கின்றது.
இணைப்புகள்
டவர் பிரிவு விற்பனை, ஆர்காம் மற்றும் ஏர்செல் நிறுவனத்துடனான இணைப்பு ஆகியவை 2017-ம் ஆண்டு அரையாண்டிற்குள் முடிந்துவிடும் என்றும் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
இவை மட்டும் இல்லாமல் சிஸ்டமா ஷேம் டெலிசர்வீஸ் நிறுவனத்துடனான இணைப்பு மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஒருங்கிணைப்பு
நிறுவனத்தை முன்னேடுத்துச் செல்ல ஒரே வழி ஒருங்கிணைப்பு மட்டும் தான் என்றும், இதற்கான முதல் படியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் எடுத்துள்ளதாகவும் ஆர்காம் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி குருதீப் சிங் கூறினார்.
கடன் சுமை குறையும்
ப்ரூக்ஃபீல்ட் மற்றும் ஏர்செல் பரிவர்த்தனைகளால் 2018-ம் ஆண்டிற்குள் ஆர்காம் நிறுவனத்தின் 70 சதவீத கடன் பிரச்சனை குறையும் என்றும் டிசம்பர் 31-ம் தேதி வரை ஆர்காமின் கடன் தொகை 42,800 கோடியாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏர்செல் பெரிதாகப் பாதிப்பு இல்லை
ஏர்செல் நிறுவனத்தின் மீது வழக்கால் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை என்றும்,வழக்கை முழுமையாகக் கண்காணித்து வருவதாகவும், ஆர்காம் நிறுவனத்தின் உத்தி மற்றும் ஒழுங்குமுறை விவகார தலைவர் புனித் கர்க் கூறினார்.
ஏர்செல் வழக்கு
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர்செல் நிறுவனத்தின் உரிமையை ரத்துச் செய்ய முடியாது என்றும், அதிகமான பங்குள் வைத்துள்ள பங்குதாரர்கள் யாரும் அந்த வழக்கில் இல்லை என்றும் மத்திய புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ப்ரூக்ஃபீல்ட்
2016-டிசம்பர் மாதம் கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனத்திற்குத் தனது நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் ஆர்காம் விற்றது குறிப்பிடத்தக்கது.