அண்ணனுக்கு போட்டியாக தொலைத்தொடர்பு நிறுவனங்களை வளைத்துப்போடும் அனில் அம்பானி..!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், டாடா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் ஆர்காம்-ஏர்செல்-எம்டிஎஸ் நிறுவனங்களுடன் இணைய வாய்ப்பு உள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், டாடா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் ஆர்காம்-ஏர்செல்-எம்டிஎஸ் நிறுவனங்களுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக இது குறித்து நன்கு தெரிந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இப்படி ஒரு இணைவு நடந்தால் இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெயரை ரிலையன்ஸ் நிறுவனம் பெறும். இப்போது ஐடியா மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் இணைந்தால் முதல் இடத்தைப் பெறும், ஏர்டெல் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படும்.

இதனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கும் ஆர்காம் நிறுவனத்திற்கும் இடையில் போட்டில் நிலவும் நிலை உறுவாகி உள்ளது.

புதிய தலைவருடன் சந்திப்பு

புதிய தலைவருடன் சந்திப்பு

டாடா குழுமத்தின் புதிய தலைவரான என் சந்திரசேகரன் அவர்களுடனான சந்திப்பை அடுத்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி இந்த இணைப்பு கண்டிப்பாகச் சாத்தியம் என்று நம்புவதாகக் கூறுகின்றனர்.

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் உள்ள சிக்கல்கள்

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் உள்ள சிக்கல்கள்

இது குறித்து இப்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்திற்கு 30,000 கோடி வரை கடன் இருப்பதாகவும், அது மட்டும் இல்லாமல் ஜப்பானின் டொக்கோமோ நிறுவனத்துடனான சட்ட பிரச்சனைகள் போன்றவை தடைகளாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நிறுவனங்கள் தரப்பில் இருந்து பதில் இல்லை

நிறுவனங்கள் தரப்பில் இருந்து பதில் இல்லை

டாடா டெலி சர்வீசஸ், டாடா சன்ஸ் மற்றும் ஆர்காம் நிறுவனங்கள் இது குறித்துக் கேள்வி கேட்ட மின்னஞ்சலுக்குப் பதில் ஏதும் அளிக்கவில்லை. ஆர்காம், ஏர்செல், டாடா டெலி சர்வீஸஸ் நிறுவங்களுக்குக் கடன் அளித்துள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்திடம் இது குறித்துக் கேட்கப்பட்டதற்கு இதற்கான வாய்ப்பு நெருங்கி வருவதாகக் கூறுகின்றது.

முக்கியச் சிக்கல் கடன்

முக்கியச் சிக்கல் கடன்

ஆர்காம் நிறுவனத்துடன் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை இணைப்பதில் டாடாவின் கடன் தொகை மட்டும் தான் சிக்கலாக உள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். டாடா குழுமம் டெலிகாம் பிரிவைச் சுத்தமாக விற்றுவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளது. இதற்காக டாடா நிறுவனம் 10,000 கோடி செலவு செய்து மொத்தமாக டெலிகாம் பிறிவை விற்க முடிவு செய்ய உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இவை மட்டும் இல்லாமல் ஈக்விட்டி மூலம் 40,000 கோடி வரை திரட்ட டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

டாடா குழும நிர்வாகிகளின் முடிவு

டாடா குழும நிர்வாகிகளின் முடிவு

எனினும், நிறுவனத்தை விற்பது, அல்லது தாற்காலிகமாக மூடுவது என்று முடிவு செய்துள்ளதாக டாடா குழும நிர்வாகி கூறியுள்ளார். வேறு நிறுவனத்திற்கு விற்பதினால் ஈக்விட்டி மூலம் முதலீடுகள் பெற டாடா குழுமத்திற்கு விருப்பம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜியோ - ஏர்டெல் போட்டி

ஜியோ - ஏர்டெல் போட்டி

தொலைத்தொடர்பு துறை சந்தையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மட்டும் ஜியோவிற்குப் போட்டியாக விலை போரை நடத்தி வருகின்றது.

தொலைத்தொடர்பு துறை

தொலைத்தொடர்பு துறை

இன்றைய தொலைத்தொடர்பு துறை உள்ள சூழலில் முதல் மூன்று இடங்களில் உள்ள நிறுவனங்களால் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் விரைவில் இணைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டெலினார்

டெலினார்

கடைசி நிலையில் உள்ள நார்வேயின் டெலினார் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது, டெலினார் நிறுவனத்தை ஆர்காம் அல்லது ஏர்டெல் நிறுவனம் வாங்க வாய்ப்புள்ளது.

டாடா டெலி சர்வீசஸ்

டாடா டெலி சர்வீசஸ்

தற்போது உள்ள 12 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் 53 மில்லியன் பயனர்களுடன் 8வது இடத்தில் உள்ளது. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் ஜியோ சேவை அளிக்கும் முன்பிருந்தே போராட்ட நிலையில் தான் உள்ளது. ஏற்கனவே வோடாபோன் நிறுவனத்துடனான இணைப்பு கடன் பிரச்சனையால் தோல்வியுற்றது.

ஆர்காமுடன் இணைந்தால் என்னவாகும்..?

ஆர்காமுடன் இணைந்தால் என்னவாகும்..?

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் ஆர்காம், ஏர்செல், எம்டிஎஸ் நிறுவனத்துடன் இணைந்தால் 260 மில்லியன் வாடிக்கையாளர்கள் பெறும். ஏர்டெல் நிறுவனம் 2016 டிசம்பர் 31-ம் தேதி வரையிலான கணக்கின் படி 266 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் உள்ளது.

வோடாபோன் - ஐடியா

வோடாபோன் - ஐடியா

வோடாபோன் நிறுவனத்திடம் 205 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஐடியா நிறுவனத்திடம் 190 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இரு நிறுவனங்களும் இணையும் போது 395 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தைப் பிடிப்பார்கள்.

சந்தை வருவாய்

சந்தை வருவாய்

டாடா டெலி சர்வீசஸ், ஏர்செல், எம்டிஎஸ், ஆர்காம் நிறுவனங்களிடம் 18 சதவீதம் வருவாய் சந்தை பங்கு உள்ளது, ஏர்டெல் நிறுவனத்திடம் 31 சதவீதம், வோடபோன் நிறுவனத்திடம் 23 சதவீதமும், ஐடியா நிறுவனத்திடம் 19 சதவீதமும்க் வருவாய் சந்தை பங்கு விகிதம் உள்ளது.

ஜியோ சந்தை வருவாய்

ஜியோ சந்தை வருவாய்

ஜியோ நிறுவனத்திடம் டிசம்பர் இறுதி வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், ஆனால் இலவச சேவை அளித்து வருவதால் வருவாய் சந்தை மதிப்பு ஏதும் இல்லை.

டாடா நிறுவனத்திடம் உள்ள காற்றாலைகளின் நிலை

டாடா நிறுவனத்திடம் உள்ள காற்றாலைகளின் நிலை

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்திடம் 800 மெகா ஹெட்ஸ் பேண்டுவித் 19 சர்க்கிள்களில் உள்ளது, இதை வைத்து 4ஜி சேவை அளிக்க முடியும் ஆனால் சந்தை விலையை அரசுக்குச் செலுத்தினால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.

டாடா டெலி சர்வீசஸ் ஆர்காம் நிறுவனத்துடன் இணையும் போது ஏற்கனவே ஜியோவிடம் இருந்து சேவையைப் பகிர்ந்து கொள்வதால் அதிகமான தொகையை அரசுக்கு ஆர்காம் செலுத்த விரும்பாது என்றும், 800 மெகா ஹெட்ஸ் காற்றலைகளில், சில அல்லது மொத்தமாக அரசுக்குத் திருப்பி அளிக்கப்படும் என்று இது குறித்த விவரங்களைத் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+